Monday 22 September 2014

பேட்டைரோடு சரீபு தெருவில் பெண்கள் பயான்



திருவாரூர் மாவட்டம் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.09.2014 அன்று பேட்டை ரோடு சரீபு தெருவில் உள்ள சகோதரர் ஜெய்னுலாப்தீன் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் மாட்ட தாயி ஹாஜாமுகைதீன் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் அண்டைவீட்டார் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள்கலந்து கொண்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் மானவர்கள் தர்பியா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.09.2014 அன்று காலை 10 மனிமுதல் 12 மனிவரை மஸ்ஜித்நூரில் மானவர்கள் தர்பியா நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் தர்பியா பயிற்ச்சியளித்தார்கள்

Thursday 18 September 2014

சூனியகாரர்களுக்கு அதிர்ச்சிகொடுத்த சன்டிவி புதியதலைமுறை டிவி வீடியோ


கூட்டுகுர்பானி அறிவிப்பு!! கடைசி நேர சிரமத்தை தவிற்க்க முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள்




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக குர்பானி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
மாடு ஒரு பங்கு 1900 ரூபாய்.
ஆடு ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய்
குர்பானி கொடுக்க விரும்புவோர் விரைவாக பணத்தை கொடுத்து பதிவு செய்து கொள்ளவும். கடைசி நேர சிரமத்தை தவிர்க்க முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம்

Tuesday 16 September 2014

தவ்ஹித்ஜமாத்தின் கோரிக்கையை ஏற்று குடிநீர் பிரச்சனையை சரிசெய்த பேரூராட்சிக்கு பாராட்டு

முத்துப்பேட்டையில் பல நாட்களாக குடிநீர் சரியாக வினியோகிக்க படாமல் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள் பாதிக்கப்பட்ட மக்கள் தவ்ஹித்ஜமாத்திடம் முறையிட்டனர்

உடனே தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை செய்து பேரூராட்சி நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தனர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்

துரிதமாக நடவடிக்கையில் இறங்கிய பேரூராட்சி நிர்வாகம் இப்போது தன்னீர் பிரச்சினையை சரிசெய்துள்ளது நம் கோரிக்கையை ஏற்று ஒருநாள் விட்டு ஒருநாள் தன்னீர் சப்ளை செய்யப்படுகிரது இதையும் சிரிது காலத்தில் தினமும் தன்னீர் கிடைக்கும்படி செய்வார்கள் என நம்புகிறோம்

பிரச்சினையின் தீவிரம் உனர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்தை பாராட்டுகிறோம்



Monday 15 September 2014

அடுக்கடுக்கான கேள்விகள் பிஜெ அவர்களின் ஆனித்தரமான பதில்கள் ,புதியதலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரிச்சை நிகழ்ச்சி [14.09.2014] வீடியோ



அக்னிப்பரீட்சை - பி.ஜெ பேட்டி 14-09-2014 by abdulnaseerkw

குண்டான்குளத்தெருவில் பெண்கள் பயான்




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.09.2014 அன்று குண்டான்குளத்தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் மாட்ட தாயி உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறறனர்
அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் மானவர்கள் தர்பியா பயிற்ச்சி

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித்நூரில் 14.09.2014 காலை 10 மனிமுதல் 12 மனிவரை மானவர்களுக்கு தர்பியா நடைபெற்றது
இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் பயிற்ச்சி அளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்


Monday 8 September 2014

கிட்டங்கிதெரு ஆரூரான் சகோதரர்கள் இல்லத்தில் பெண்கள் பயான்

திருவாரூர் மாவட்டம் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.09.2014 அன்று கிட்டங்கிதெருவில் உள்ள ஆரூரான் சகோதரர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில்மாவட்ட தாயி இறையச்சம் என்ற தலைபில் உறையாற்றினார்கள் ஏராளமான பெண்கள்கலந்துகொண்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

Friday 5 September 2014

வினாயகர் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்வீடுகள் இந்துத்துவா பயங்கரவாதிகளால்
சேதப்படுத்தப்பட்டது அறிந்ததும் சில நிமிடங்களில் சம்பவ்ச்ம் நடந்த இடத்திற்கு சென்ற தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் நிலமையை ஆய்வு செய்தனர்
அதன் தொடர்ச்சியாக இன்று தவ்ஹிஜமாத் மாநில செயளாலர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நடந்ததை கேட்டு அறிந்தனர் அடுத்தகட்டமாக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என் அறிவுரைகூறி ஆறுதல்கூறினர்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்திக்க இன்று நேரம் ஒதுக்கி இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டுதான் வரமுடியும் என் கூறிவிட்டனர்
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் சந்தித்துவிட்டு காவல்துறை மாவட்ட கன்கானிபாளரை ச்ந்திக்க சென்றனர்.

வீடுகளுக்குள் எங்களை வைத்து வெளியே கேட் போட்டு லாக் செய்த காவல்துறை அவர்களை ரவுடித்தனம் செய்ய அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இதை எஸ்பியிடம் கேளுங்கள் காவல்துறையால் பாதுகாப்பு கொடுக்க இயலாவிட்டால் ஒதுங்கிகொள்ள சொல்லுங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ள எங்களுக்கு தெரியும் என் ஆவேசமாக கூறினார்கள்