Monday 24 November 2014

முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு கலக்டர் அதிரடி உத்திரவு

முத்துப்பேட்டையின் அத்தியாவசிய பிரச்சினையான நீர் ஆதாரத்தை சரிசெய்வது சம்மந்தமாக நாம் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற காலாவகாசம் கொடுத்து இருந்தோம்

நாம் கொடுத்த கால அவகாசம் நெருங்கிவரும் வேளையில் மாவட்ட ஆட்சியர் மதிவானன் அவர்கள் பேருராட்சிக்கு ஒரு உத்திரவு பிரப்பித்து உள்ளார்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் கொடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் அதை நிறைவேற்ரிவிட்டோம் என்ற தகவலை தவ்ஹித்ஜமாத்திற்க்கு தெரிவிக்க வேண்டும் என உத்திரவு பிரப்பித்து அதன் நகலை தவ்ஹித்ஜமாத் பார்வைக்கு  அனுப்பி உள்ளார்

இனியாவது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தவ்ஹித்ஜமாத் எந்த ஒப்பந்தத்திலும் பங்கு கேட்கும் அமைப்பு கிடையாது

மக்களின் நன்மைக்காக பாடுபட்டு அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம் மறுமையில் எதிர்பார்க்கும் அமைப்பு தவ்ஹித்ஜமாத்

என்ன செய்கிரது பேரூராட்சி பொருத்து இருந்து பார்ப்போம்

மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதம் கிழே

குண்டான் குளத்தெருவில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.11.2014 அன்று குண்டான் குளத்தெரு சகோதரர் அலிகான் [கிளை செயளாலர் புகாரியின் தந்தை] அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது ஏராளமான பென்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 11 November 2014

அர்ரஹ்மான் அதரவற்றோர் இல்லத்திற்க்கு ஒரு இலட்சத்து என்பத்தி மூன்றாயிரத்து ஐநூரு [1,83,500] ரூபாய் வழங்கப்பட்டது.





தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.11.2014 அன்று அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்க்கு கட்டிட வேலைகளுக்காக ரூபாய் ஒரு இலட்சத்து என்பத்தி மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய்[1,83,500] வழங்கப்பட்டது

ஆதரவற்றோர் இல்லத்தில் டிவிக்கு பெட்டி செய்ய மூன்றாயிரம் நிதி உதவி


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.11.2014 அன்று ஆதரவற்றோர் இல்லத்திர்க்கு டிவிக்கு பெட்டி செய்வதற்க்காக மூன்றாயிரம் ரூபாய் [3000]  வழங்கப்பட்டது

டிசம்பர் 10ம் தேதிக்குள் அடிப்படை தேவைகள் நிரைவேற்ற பணிகளை தொடங்காவிட்டால் மிக பெறிய போராட்டம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2014 அன்று முத்துப்பேட்டையில் உள்ள நீர்நிலைகளில் நீர்நிரப்ப ஆவன செய்யவும் நீர் வரும் பாதைகளை தூர்வாரவும் ஆவன செய்ய வழியுறுத்தி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
முத்துப்பேட்டை பேரூராட்சியில் நாம் பலதடவை போகும் போதும் நிர்வாக அலுவலர் பணியில் இருப்பது கிடையாது இன்று காலை 11.30 மனியளவில்கூட அவர் பணிக்கு வரவில்லை சம்பளநாள் மட்டும்தான் வருவார் போல் தெறிகிரது
இந்த நிலையில் பேரூராட்சி இருந்தால் முத்துப்பேட்டை இதை விட மோசமாகதான் இருக்கும் இதற்க்காக தனி போராட்டம் நடத்த வேண்டிவரலாம்
டிசம்பர் 10ம் தேதிக்குள் பேரூராட்சி நிர்வாகம் அடிபடை வேலைகளை செய்யாவிட்டால் மிகபெரிய போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்

முத்துப்பேட்டையில் உள்ள பள்ளிகூடங்களில் தீவிரவாத எதிர்ப்பு கட்டுரை அழைப்பு கொடுக்கப்பட்டது



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2014 அன்று முத்துப்பேட்டை கிளை 1 பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகூடங்களில்  தீவிரவாத எதிர்ப்பு கட்டுரை பிரசுரம் கடிதம் வினியோகம் செய்யப்பட்டது 

பட்டுக்கோட்டைரோடு சகோதரர் அப்துல்ரஹ்மான் வீட்டில் பெண்கள் பயான்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.11.2014 அன்று பட்டுக்கோட்டை ரோடு  டாக்டர் அப்துல்ரஹ்மான் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான்நடைபெற்றது

மஸ்ஜித்நூரில் மணவர்கள் தர்பியா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.11.2014 அன்று மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கான தர்பியா  காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது

Monday 10 November 2014

முத்துப்பேட்டை நூர்பள்ளிவாசலில் வரும் 14.11.2014 அன்று எம் ஐ சுலைமானின் ஜும்மா உரை நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் மஸ்ஜித்நூரில் வரும் 14.11.2014 வெள்ளிகிழமை ஜும்மாவில்  மாநில பொருளாளர் சகோதரர் எம் ஐ சுலைமான் அவர்கள் உரைநிகழ்த்துகிரார்கள்

அந்த உரை நமது இனையதளத்தில் www.tntjmtt.blogspot.com நேரடி ஒளிபரப்பு LIVE செய்யப்படும்.

முத்துப்பேட்டை முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு சுவர் விளம்பரம்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.11.2014 அன்று முத்துப்பேட்டையில் சுமார் 10 இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு சுவர் விளம்பரம் செய்யப்பட்டது

தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் முத்துப்பேட்டைக்கு வரும் பஸ்களில் வினியோகம் செய்யப்பட்டது


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.11.2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசுரம் முத்துப்பேட்டைக்கு வரும் பஸ்களில் வினியோகம் செய்யப்பட்டது

மாற்றுமத சகோதரருக்கு சூனியம் ஓர் ஆய்வு புக் வழங்கி தாவா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.11.2014 அன்று சூனியம் ஓர் ஆய்வு புத்தகம் மாற்றுமத சகோதரருக்கு இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் ஹதீஸ் விளக்க வகுப்பு


திருவாரூர்மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.11.2014 ,08.11.2014  தினங்களில் மகரிபு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற தினம் ஒரு ஹதீஸ்  நிகழ்ச்சி

மஸ்ஜித்நூரில் திருகுரான் விளக்க வகுப்பு


திருவாரூர்மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.11.2014 ,10.11.2014  தினங்களில் காலை சுபுஹு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா நிகழ்ச்சி

Wednesday 5 November 2014

குளம் குட்டைகளை சரிசெய்து நீர் ஆதாரத்தை பெருக்காவிட்டால் மிகபெரிய போராட்டம் பேரூராட்சியை வற்புறுத்துவது என தவ்ஹித்ஜமாத் தீர்மானம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ஆலோசனைகூட்டம் 05.11.2014 காலை மஸ்ஜித்நூரில் கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் முத்துப்பேட்டையின் அடிப்படை பிரச்சனையான நீர் ஆதாரத்தை பெருக்குவது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது

முத்துப்பேட்டைக்கு நீர்நிலை ஆதாரமான குளம் குட்டைகளை தூர்வாருவது 

அந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதைகளை சரிசெய்வது

ஆற்று தண்ணீரை கொண்டு குளங்களை நிறப்புவது 

குளங்களை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதை தடுத்து மாற்று ஏற்பாடு செய்வது

போன்ற கோரிக்கைகளை செய்ய பேரூராட்சியை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது சி கிரேடைவிட மோசமான சுகாதாரத்தில் வாழும் முத்துப்பேட்டை மக்கள் கிரேடு வரிசெழுத்துகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அமசம்

தவ்ஹித்ஜமாத் கடந்த ஆகஸ்ட் மாதம் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளருபடிகளை சரிசெய்ய வலியுறுத்து ஒரு சில ஆலோசனைகளை கூறி கோரிக்கை வைத்தது அது உடனே சரிசெய்யப்பட்டது 

அதே போல இதையும் சரிசெய்யாவிட்டால் மாநில தலைமையின் ஆலோசனையின் படி மிகபெரிய போராட்டத்தை தவ்ஹித்ஜமாத் நடத்தும் இன்ஷா அல்லாஹ்

குடிதண்ணீர் குளருபடியை சரிசெய்ய மனுகொடுக்க சென்ற போது

மஸ்ஜித்நூரில் முஹர்ரம் நோன்பு இப்தார் நிகழ்ச்சி

பிறை 9ம்நாள் 03.11.2014

பிறை 9ம்நாள் 03.11.2014


பிறை 10ம் நாள் 04.11.2014

பிறை 10ம்நாள் 04.11.2014
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக முஹர்ரம் நோன்பு 9 மற்றும் 10 பிறைகளில் நோன்புபிடித்தவர்களுக்கு மஸ்ஜித்நூரில் 03.11.2014 மற்றும் 04.11.2014 ஆகிய தினங்களில் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது

முத்துப்பேட்டையில் சுமார் 6 வருடமாக சுன்னத்தான நோன்புவைப்பதை ஆர்வபடுத்தும் விதமாக தவ்ஹித்ஜமாத் இதை செய்துவருகிரது இதன் மூலம் மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்பட்டு வருகிரது

மக்கள் இதை வரவேற்க்கிரார்கள் ரமலானில் நோன்பு திறக்க அனைத்து பள்ளிவாசல்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் சுன்னத்தான நோன்புகளுக்கு ஏதும் செய்வதில்லை இப்போது தவ்ஹித்ஜமாத் இந்த ஏற்பாடுகளை வருடா வருடம் செய்வதன் மூலம் நோன்பு நோற்க்கும் ஆர்வம் அதிகமாகிரது என இப்தாருக்கு வந்த ஒரு சகோதரர் கூறினார் அல்ஹம்துலில்லாஹ்

முஹரம் பிறை 9,10 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்புகஞ்சி வினியோகம்

பிறை 9ம்நாள் 03.11.2014

பிறை 9ம்நாள் 03.11.2014

பிறை 10ம்நாள் 04.11.2014

பிறை 10ம்நாள் 04.11.2014
தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித்நூரில் முஹர்ரம் நோன்பாளிகளுக்கு பிறை 9 மற்றும் பிறை 10ல் 03.11.2014,மற்றும் 04.11.2014 இரண்டுநாட்கள் நோன்புகஞ்சி வினியோகம் செய்யப்பட்டது

இது முத்துப்பேட்டை மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது
நம் மர்கசில் வருடா வருடம் சுன்னத்தான நோன்பு வைப்பதை ஆர்வபடுத்தும் விதமாக இதை செய்துவருகிறோம்

இதேபோல மற்ற மற்ற பள்ளிவாசல்களிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் இதன்மூலம் நல்ல அமல்கள் செய்பவர்களின் என்னிக்கை அதிகரிக்க வேண்டும்