Thursday 31 January 2013

பத்திரிக்கையாளர்களை இன்று காலை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உண்மைகளை யாருக்காகவும் மறைக்காமல் வெளிப்படையாக பேசினார்

சற்று முன் விஸ்வரூபம் படம் குறித்து செய்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் பேட்டியளித்தார். இதில் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி குறிப்பிட்டு பேசுகையில் தவ்ஹீத் ஜமாஅத்தில் ஏழரை லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!

அவர் அளித்த பேட்டியின் கருத்தாக்கம்:

1. எதிர்ப்பது சிறு கூட்டம் இல்லை, அவர்களெல்லாம் முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள், தவ்ஹீத் ஜமாத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட பரந்து விரிந்த அமைப்பு , 500 தியேட்டர்களையும் முற்றுகையிடபோவதாக சொல்கின்றனர், தமிழக அரசால் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் .

2. எல்லா சொத்தையும் அடகுவைத்து பணத்தையெல்லாம் கொட்டியுள்ளேன், படம் வெளியாகாவிட்டால் பெரும் நஷ்டம் என கமல் சொல்கின்றார் : அவர் 58 வது முதிர்ச்சி உள்ள மனிதர், 50 ஆண்டுகால சினிமா அனுபவம் உள்ளவர், 100 கோடிக்கு படம் எடுப்பதாக இருந்தால் எப்படி எடுக்க வேண்டும் எப்படி பணத்தை எடுக்க வேண்டும் என அவர் தான் யோசித்து இருக்க வேண்டும், அவர் தான் ரிஸ்க் எடுத்தார் அதர்க்கு அரசாங்கம் எப்படி பொருப்பாகும், தனிமனிதரின் லாபத்திற்க்காக நாட்டின் சட்டம் ஒழுங்கை பலி கொடுக்க முடியாது.

4. சினிமா சட்டம் 1995 படி ஒரு மா நில அரசு விரும்பினால் எந்த படத்தையும் தடை செய்யலாம், எனவே தணிக்கை துறை அனுமதி வழங்கிவிட்ட பிறகு மா நில அரசிர்க்கு தடை செய்ய அதிகாரம் இல்லை என்பது பொய்யான வாதம்.

5. “இப்ப வா, அப்பரம் இன்னொரு நாள் வா” என கமல் இஸ்லாமிய தலைவர்களை அலைகழித்தார் ,

6. நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் , கமல் இல்லை,

7. நான் சினிமா பார்ப்பது இல்லை , பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது, எனக்கு அதற்க்கு நேரம் இல்லை.

8. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டே படத்திற்க்கு தடை விதிக்கபட்டுள்ளது.

9. இஸ்லாமிய அமைப்புடன் பேசி வெட்ட வேன்டியதை வெட்டிவிட்டு படத்தை வெளியிட்டால் அரசு ஒத்துழைக்கும்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று அளித்த பேட்டியின் வீடியோ

தவ்ஹீத் ஜமாஅத் குறித்து அவர் பேசியது ஆரம்பத்திலும் பின்னர் அவர் அளித்த பேட்டி முழுவதும் இதில் இடம் பெற்றள்ளது.கீழே உள்ள லிங்கில் வீடியோ பார்க்கவும்

http://www.tntj.net/129042.html

திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் 31-1-2013 இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்தரமாக தடைசெய்யக் கோரி மனு அளிக்கப்பட்டவர். சட்டஒழுங்கு பிரச்சனையை வந்துவிட கூடாது மத நல்லினக்கம் முக்கியம் என்ற அடிப்படையிலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை தடுக்கும் விதத்திலும் இம்மனுவை அளித்தனர். அதில் சில புகைப்படங்கள்...


உண்மையை சொன்னார் சோ ரமசாமி.அல்லாஹ் சிலரை கொண்டு சிலரை வீழ்த்துவான்

“தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான்" - சோ (ராமசாமி),

CNN IBN ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார் சோ.

“தமிழக அரசு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார் அவர்.

ராஜ்தீப் சர்தேசாய், “அரசு எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களின் சார்பாக செயல்படுகிறது, கமல்ஹாசன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என்பதை பார்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியபோது சோ, “பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்” என்றார்.
Like

Wednesday 30 January 2013

கமல் அழுதால் தவறு சரியாகி விடுமா?வியாபாரத்தில் நஷ்டமடைபவர்கள் எல்லாம் இப்படி நடுரோட்டில் நின்று அழுதுகொண்டா இருக்கிறார்கள் ? படத்தில் நடித்தவர் நிஜத்திலும் நடிக்கிறார்

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் வென்னைதிரண்டு வரும்போது சட்டிஉடைந்ததுபோல என்று அதேபோல எல்லாம் நமக்கு சாதகமாக நடந்து வரும்போது சமாதனம் என களமிரங்கி குட்டையை குழப்புகிறார்கள்

ஒரு சேனலில் பேசிய தேசிய லீக் பஷீர் கமலின் 12 மனி பேட்டிக்கு பிறகு நிலமை மாறிவிட்டது தமிழகமே கமல் பக்கம் போய் விட்டது முஸ்லிகள் தனிமையாகி விட்டார்கள் என கூறுகிறார்

இதைதான் ஜால்ரா என்பது கமலின் பேட்டிக்கு பிறகு அவர் கடந்தெடுத்த கோழை என்பதுதான் தமிழகத்துக்கு தெறியவந்தது ஒரு செய்திசேனலும் ஞானி அவர்களும் எவ்வள்வோ உசுப்பேத்திவிட்டும் திரைஉலகினர் யாரும் கமலுக்கு ஆதரவாக களமிரங்கவில்லை வெரும் அறிக்கையோடு ஒதுங்கிகொண்டார்கள்

ஒரு வியாபரம் செய்தால் லாபமும் வரும் நஷ்டமும் வரும் லாபம் வரும்போது அனுபவித்து விட்டு நஸ்டம் வரும்போது நாட்டைவிட்டு ஓடிவிடுவேன் என்பது எல்லாருக்கும் பொருந்துமா?

கார்க்கோ வியாபரத்தில் சில சிக்கல் ஏற்பட்டு எத்தனையோ சகோதரர்கள் வீட்டையல்லாம் வித்தார்கள் தான் அதற்க்காக அரசாங்கம் சிக்கலை ஏற்படுத்திவிட்டது அதனால் நான் நாட்டை விட்டு ஓட பொகிறேன் என்று ஒருவன் சொன்னால் நாம் என்ன சொல்வோம் ஓடுடா அதையேன் சொல்லிகொண்டு இருக்கிறாய் என்போம் அதே பதில்தான் கமலுக்கும்

படத்தில் நடித்து கொண்டு இருந்த கமல் இப்போது நேரிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் அவர் நாயகன் படத்தில் நடிக்கும் போதே கோடிக்கு மேல் சம்பலம் வாங்கியவர் அதன் பிறகு அவர் நடித்த ஒரு படத்திற்க்கு ஒரு வீடு என்றாலும் எத்தனை வீடு இருக்கனும் நீங்களே கனக்கு போட்டு கொள்ளுங்கள் தனி விமானத்தில் வருகிறார் போகிறார் பரதேசியாகிவிட்டதாக நடிக்கிரார்

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள இயலாமல் அனுதாபத்தின் மூலம் கரையேரிவிடலாம் என அழுதுபுழம்புவர்கள் கோழைகள் கமலுக்குதான் தமிழகத்தால் நன்மையே தவிர தமிழகத்திற்க்கு அவரால் ஒரு நன்மையும் கிடையாது

டாம்999,குற்றப்பத்திரிக்கை, ஒரெஒரு கிராமத்திலே ,பயர், போன்ற படம் எடுத்தவர்களுக்கு ஒரு நியாயம் கமலுக்கு ஒரு நியாயமா?

கடைசியாக ஒரு கேள்வி கமல் உன்மையிலேயே நௌநிலவாதியாக இருந்தால் காவி பயங்கரத்தை வைத்து ஒரு படம் எடுக்கதயாரா? ஞானி போன்றவர்கள் அது போன்ற படத்திற்க்கு ஆதரவு கொடுக்க தயாரா?·

Tuesday 29 January 2013

தார்மீக அடிப்படையிலும். குர் ஆன் ஹதீஸ் அடிப்படையிலும் .வரம்புமீறிய பாரதிராஜாவை அதேபானியில் விமர்சித்தது சரியானதே பிஜெ விளக்கம்

அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன்? இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள்.

நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும்.

விஸ்வரூபம் பட்த்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம்.

அல்லது முஸ்லிம் தலைவர்களே இதில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்று கூறினால் அதற்கு உரிய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும்.

ஆனால் அனைத்து முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் நடவடிக்கை பற்றி கருத்து சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் அவர் கருத்து சொல்ல வேண்டும்?

விஸ்வரூபம் படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம். அந்தப் படத்தை எதிர்ப்பதன் மூலம் உங்களை தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி விடாதீர்கள் என்று அவர் கூறுகிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியையும் இங்கே சொல்கிறார். இதுவரை நீங்கள் தீவிரவாதிகள் என்பது உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி அப்பனைக் காட்டிக் கொடுத்த மகன் போல் இப்படத்தை எதிர்த்து நீங்கள் தீவிரவாதிகள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்பது தான் இதன் கருத்து.

இப்படத்தை எதிர்க்கும் எல்லா முஸ்லிம் தலவர்களும் தீவிரவாதிகள் என்று சொன்னாரே இந்தக் கொடூரமான சொல் என்ன விளைவை ஏற்படுத்தும்? இந்து மக்கள் மத்தியிலும் மற்ற மக்கள் மத்தியிலும் இது எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும்? எல்லா முஸ்லிம்களும் தீவிரவதிகள் தானா? இவ்வளவு நாட்களாக நடித்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா? என்று மற்றவர்கள் எண்ணினால் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்? இது குறித்து எழுத்தாளர் யாரும் வாய் திறந்து பாரதிராஜவை இதுவரைக் கண்டிக்கவில்லை.

நான் பதிலடி கொடுத்ததற்காக எனக்கு எதிராக பேனா பிடிக்கும் நண்பர்கள் இது எவ்வளவு கொடூரமான விஷக் கருத்து என்று ஏன் பாரதிராஜவைக் கண்டிக்கவில்லை?

பொதுவாக இஸ்லாத்திலும் இன்ன பிற சட்டங்களிலும் கிராமப்பஞ்சாயத்துகளிலும் ஆரம்பித்து வைத்தவனுக்கு எதிராக மற்றவன் பேசுவதைக் குற்றமாக தீர்ப்பளிக்க மாட்டார்கள். இதுதான் உலக நியதி. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும் மரபு.

பாரதிராஜா சுமத்திய குற்றச்சாட்டில் நானும் அடக்கம்.

என் சமுதாயத்தில் உள்ளவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று பல வருடங்களாக நான் பிரச்சாரம் செய்து தீவிர எண்ணம் கொண்ட சிலரின் அச்சுறுத்தல் காரணமாக எனக்கு அரசுப் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு பாடுபட்டு வருகிறேன். இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனவும் ஆதாரங்களுடன் விளக்கி வருகிறேன். ஒரு திரைப்படத்தை நான் எதிர்ப்பது என்னையும் தீவிரவாதி பட்டியலில் சேர்த்து விடும் என்றால் அதனால் நானும் பாதிக்கப்படுகிறேன்.

நமது மார்க்கத்துக்காகவும் உரிமைக்காகவும் பேசினால் நமக்கும் தீவிரவாதி பட்டம் கிடைக்குமோ என்ற அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கிறேன்.

பாரதிராஜா வைத்த லாஜிக் தப்பானது. பொருளற்றது என்பதை அவருக்கும் அவரது கருத்தில் உடன்படுவோருக்கும் நான் விளக்குவதற்காக அதே லாஜிக்கில் பதில் சொன்னேன்.

தீவிரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லப்படும் படத்தை எதிர்த்தால் அவன் தீவிரவாதி தான் என்ற லாஜிக் பிரகாரம்

விபச்சாரம் செய்யும் நடிகைகள் பற்றி எழுதியதற்காக தினமலர் அலுவலகத்தை தாக்கினீர்களே? அந்தப் பத்திரிகையைக் கொளுத்தினீர்களே? அதன் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய வைத்தீர்களே? விபச்சாரம் செய்த நடிகையைப் பற்றி எழுதும் போது அதை நீங்கள் எதிர்த்தால் நீங்களும் உங்கள் குடும்பப் பெண்களும் அந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

இந்தக் கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்று உணர்த்துவதற்குத்தான். அவரது குடும்ப்ப் பெண்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அல்ல. அப்படி எடுத்துக் கொள்ளலாமா என்ற வாசகம் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்த்தில் தான் கையாளப்படும்.

இந்த லாஜிக்கை பாரதிராஜா பல சமயங்களில் மீறி இருந்தால் அவற்றில் ஒன்றை நான் உதாரணமாக நான் சொல்லி இருப்பேன். அவர் விபச்சாரம் செய்த நடிகைகள் பற்றிய செய்தியின் போது லாஜிக்கை மீறியுள்ளது தான் என் நினைவுக்கு வருகிறது. எனவே தான் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் பொதுவாக இது போல் ஆரம்பித்து வைப்பது தான் குற்றமாகும். தூண்டப்பட்டு கூடுதல் குறைவாகச் சொல்வது மனிதனின் இயல்பாக உள்ளது.

அநீதி இழைக்கப்பட்டவன் தவிர மற்றவன் தீய சொல்லைப் பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் – திருக்குர்ஆன் 4:148

அவர்கள் வரம்பு மீறினால் அது போல் நீங்களும் வரம்பு மீறலாம். திருக்குர்ஆன் 2:194

இஸ்லாம் மட்டும் இதைக் கூறவில்லை. மானமுள்ள எந்த மனிதனின் இயல்பும் இதுதான்.

ஒரு படத்தை எதிர்ப்பதால் - குர்ஆனைக் கேவலப்படுத்துகிறது என்பதற்காக எதிர்ப்பதால் - முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றால் இந்த விமர்சனம் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமயானவை.

இவனுக எல்லோருமே தீவிரவாதிகள் தான். நம்மை நடித்து ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் உருவனால் அது எங்கள் உயிருக்கும் உடமைக்கும் மானத்துக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுவோம்?

தொடர்ந்து இதே வேலையாக அலைகிறார்கள். சரியான முறையில் பதில் சொல்லாமல் அமைதி காப்பதை அனுமதியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலையில் தான் அந்த உதாரணம் காட்டப்பட்டது.

அதுவும் எழுதி வைத்து நான் வாசிக்கவில்லை. மேடைப்பேச்சில் வந்து விழுந்த சொற்கள். ஆனால் பாரதிராஜா எழுதிவைத்துக் கொண்டு அந்த வாசகங்களை வாசிக்கிறாரே? நின்று நிதானமாக அவர் இதைச் சொன்னார்? வாய் தவறி அவர் இப்படி சொல்லவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பாரதிராஜாவின் குடும்பத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. உங்கள் வாதப்பட்டி இப்படி அர்த்தம் வந்து விடும் என்றுதான் சொன்னேன்.

நானோ என் சமுதாயமோ பாதிக்கப்படாத நிலையில் அந்த உதாரணம் காட்டி இருந்தால் அது மிகப் பெரும் தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பாதிக்கப்பட்ட போது பதிலடி கொடுப்பதை இதற்குச் சமமாக ஆக்க முடியாது.

பாரதிராஜா முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்ற கருத்தில் நான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் நான் எடுத்துக் காட்டிய உதாரணத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயார்.

அன்புடன்

பீஜைனுல் ஆபிதீன்

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தருவேன் இன்ஷா அல்லாஹ்

28.01.2013. 14:29

Sunday 27 January 2013

குடியரசுதினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக ரத்ததான முகாம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு 26-01-2013 அன்று பட்டுக்கோட்டை ரோடு பழைய வின்னர்ஸ் ஸ்கூலில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி நண்பர்களும், மாற்றுமத நண்பர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் 22 பேர் இரத்த தானம் செய்தனர். திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுக்கப்பட்ட இரத்தங்கள் தானமாக வழங்கப்பட்டது.

குறிப்பு: 22 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் வந்தவண்ணம் இருந்தனர் ஆனால் 22 பேருக்கும் மேல் எடுத்து பாதுகாக்க முடியாது என்று மருத்துவ மனை ஊழியர்கள் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

Saturday 26 January 2013

தவ்ஹித்ஜமாத்தின் பெரும்முயற்ச்சியால் மலேசியாவில் விஸ்வரூபம் படம் தடைசெய்யப்பட்டது





மலேசிய மண்டல TNTJ வின் புகாரை தொடர்ந்து மலேசியாவில் தடை செய்யப்பட்ட விஸ்வரூபம்

மலேசிய மண்டல தவ்ஹீத ஜமாஅத் நிர்வாகிகள் இன்று (25-1-2013) காலை விஸ்வரூபம் படத்தை மலேசியாவில் தடை செய்யக் கோரி சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் விஸ்வரூபம் படம் மலேசியாவில் அதிகாரப்புர்வமாக தடை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று விஸ்வரூபம் படம் மலேசியாவில் வெளியாகி முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இதையடுத்து புகார் அளிக்கப்பட்டு விஸ்வரூபம் திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

விஸ்வரூபம் திரைபடத்தை ஏன் தடுக்கிறோம்? சன்நியூஸ் தொலைகாட்சியில் தவ்ஹித்ஜமாத் மாநிலதலைவர் விளக்கம் வீடியோ

Friday 25 January 2013

சென்னை மன்னடியில் மாபெரும் பொதுக்கூட்டம். ரிசானா விவகாரம், விஸ்வரூபம் பிரச்சனை அனைத்திற்க்கும் முஸ்லிம்களின் அடுத்தகட்ட செயல்பாடு என்ன? விரிவாக விளக்கமளிக்கிறார்கள் அனைவரும் கலந்து பயனடையுங்கள்



இஸ்லாமிய சட்டமே தீர்வு! மாபெரும் பொதுக்கூட்டம் - நேரடி ஒளிபரப்பு

ரிசானா விகாரத்தில் கருத்து சொன்ன கலைஞர், நக்கீரன், ஆனந்தவிகடன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் வரட்டு வாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் மற்றும் விஸ்வரூபம் திரைப்படம் அடுத்த கட்டம் என்ன என்பதை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்

உரை : பி.ஜைனுல் ஆபீதீன்

கோவைரஹ்மத்துல்லாஹ்

இன்ஷா அல்லாஹ்!

நேரம் : 27.01.13 - இரவு 7மணி

இடம் : மண்ணடி தம்புச் செட்டித்தெரு, சென்னை

Thursday 24 January 2013

தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியால் “விஸ்வரூபம் திரைப்படம்” ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், குவைத், துபாய், போன்ற நாடுகளில் திரையிட தடை.






தமிழ்நாட்டில் விஸ்வரூபம் திரைப்படம் தவ்ஹீத் ஜமாஅத் முயற்சியால் தடை செய்யப்பட்டது யாவரும் அறிந்தது. இதைபோல் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழக்கூடிய ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் திரையிட முயற்சி செய்தார் கமல் ஹாசன்.

உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது கிளைகள் மூலம் திரைபடத்தை திரையிடாமல் தடை செய்ய முயற்சி செய்தது, அதன் பலனாக ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், குவைத், துபாய், போன்ற நாடுகளில் விஸ்வரூபம் திரைப்படம் திரையிட தடை செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday 23 January 2013

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத்தின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்தது



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய பல கட்ட திட்டங்களை வகுத்து செயல்பட்டது தமிழ்நாடு முழுவதும் அந்த படம் ஓடாது என போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுவதும் தவ்ஹித்ஜமாத் சார்பாக ஒட்டப்பட்டது

மேலும் அனைத்து மாவட்டம் சார்பாகவும் மாவட்ட கவல்துரை அதிகாரிகளை சந்தித்து இந்த படம் வெளியிடப்பட்டால் அதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை செய்தது

மேலும் மாநில நிர்வாகிகள் மேல்மட்ட அதிகாரிகளை சந்தித்து நேரிலும் வர்புறுத்தினார்கள் பலமுனை தாக்குதலை சந்திக்க இயலாமல் தமிழ்நாடு அரசு விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்துள்ளது இது சம்மந்தமாக மாநில தலைமையின் அறிக்கை கிழே உள்ளது


இன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்டிஜேவின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப், மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி நேரில் வலியுறுத்தினர்.

இந்த திரைப்படம் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வந்த செய்திகளைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்.

இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்தது.

சிலர் இந்த திரைப்படம் வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் கெடும் என்பதைவிட சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதுதான் பிரதான விஷயம் என்பதையும், எவ்வளவுதான் ஜனநாய ரீதியாக போராட்டங்களை நடத்தினாலும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதைத்தான் அராசங்கம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நமது நிர்வாகிகள் உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடரித்தில் விளக்கினர்.

உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும் உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.


Tuesday 22 January 2013

சென்னையில் விரைவில் தொடங்க இருக்கும் மெட்ரோரயில் வேலைகளுக்கு ஆள் எடுக்குகிறார்கள் முஸ்லிம்கள் பயன்படுத்தி பயனடையவும்




அஸ்ஸலாமு அழைக்கும்!சகோதரர்களே சென்னை மெட்ரோ ரயில் பணிக்கு ஆள் எடுக்கிறார்கள்.ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்;16-02-2013.நேரில் சென்று விண்ணப்பிக்க கடைசி நாள்;20-02-2013.முஸ்லிம்களுக்கு தனி இட ஒதிக்கீடு உள்ளது.சகோதரர்களே தயவுசெய்து வேலையில்லாமல் உள்ள நம் சகோதரர்களிடம் தெரியப்படுத்தவும்.Pls SHARE.ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். http://chennaimetrorail.gov.in/cmrl_ta/jobposting.php

விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழ்நாட்டில் எங்கும் ஓடவிடமாட்டோம்,இதற்க்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் அறிவிப்பு






நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.

அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது

இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்


கலைஞர் அவர்களுக்கு தவ்ஹித்ஜமாத் விவாத அழைப்பு


முன்னால் தமிழக முதல்வர் கலைஞர் பொய்யர்களின் கூற்றை ஆதாராமாகவைத்து இலங்கை பெண் விசயத்தில் உளரியுள்ளார் அவர் கூறியது எந்த அளவுக்கு பொய் என்பதற்க்கான ஆதாரத்தை அவருக்கு அனுப்பி நீங்கள் சொன்னது சரி என இதற்க்கு பிறகும் நம்பினால் தவ்ஹித்ஜமாத்தோடு பகிரங்க விவாதம் நடத்த தயாரா? என கேட்டு எழுத்து பூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது அந்த கடிதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/rizana-kalainjer/

http://www.onlinepj.com/PDF/Kalainjer-Vivatham-Kaditham.pdf

Monday 21 January 2013

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான தீவிரவாதசெயல்களுக்கு ஆர் எஸ் எஸ் தான் காரனம் அதற்க்கு பிஜெபி துனைசெய்கிரது மத்திய உள்துரை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு



உண்மை வெளிவந்தது உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்ற நம்பிக்கை நிறைவேறியது இந்தியாவின் அனைத்து குண்டுவெடிப்பு ரயில் எரிப்பு போன்ற அனைத்தையும் ஆர் எஸ் எஸ் அமைப்புதான் செய்கிரது என்பதற்க்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது முதுகெழும்புள்ள உள்துரை அமைச்சர் பப்லிக்காக குற்றம் சுமத்தினார். எத்தனை காக்ரேவைத்தான் கொல்வார்கள் அல்லாஹ் மிக பெறியவன் அவர்கள் உண்மையை சொன்ன ஒரு காக்ரேயை கொன்றாலும் பல காக்ரேயை அல்லாஹ் உறுவாக்குவான்

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன - சுஷில் குமார் ஷிண்டே..!
ரகசிய முகாம்களை கண்டு பிடிக்க காடுகளில் தேடுதல் வேட்டை..!

ஜெய்ப்பூரில் நடைபெற்றும் வரும் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே '' நாட்டில் அமைதியை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இருப்பினும் சில நேரங்களில் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப் பட்டு விடுகிறது.

உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைத்த உளவுத் துறை அறிக்கையின் படி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நடத்தும் பயிற்சி முகாம்கள் ஹிந்து தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளில் எங்களின் பார்வை இல்லாமல் இல்லை '' என்று தெரிவித்துள்ளார்.

சுஷில் குமார் ஷிண்டேவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து காங்கிரசைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர் '' இதில் 100 % நான் ஷிண்டேவுடன் உடன்படுகிறேன். இதில் ரகசியம் எதுவும் இல்லை. எல்லாருக்கும் இது தெரிந்து இருந்தாலும் வெளிப் படையாகச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அதற்காக நான் ஷிண்டேவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

காடுகளில் தேடுதல் வேட்டை:

இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இருந்து செயல்பட்டுள்ளன என்கிற உண்மை தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.

1). மலேகன் குண்டு வெடிப்பு: மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் முஸ்லிம்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கர குண்டு வெடிப்பில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். மலேகன் நகரமே ரத்தமயமானது பிய்ந்துப்போன சதைகளுடன் மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

2). சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு: இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். எங்கு திரும்பினாலும் இரத்த வெள்ளம், கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் பல நூறு பேர்கள் என்று அந்த இடமே கோரமாகி போனது.

3). மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: மக்கா மஸ்ஜித், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் முகலாயர்களின் கட்டிட கலையில் 1694 கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பள்ளியில் 2007 மே 18ம் தேதி வெள்ளி கிழமை முஸ்லிம்கள் தொழுகை முடித்து வெளிவரும் பொழுது குண்டு வெடித்தது இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் காயம் அடைந்தனர்.

4). அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள அஜ்மீர் தர்காவில் 2007 அக்டோபர் 11 தேதி முஸ்லிம்களின் ரமலான் நோன்பு மாலை 6.12 pm க்கு குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டுகள் வெடித்தது முஸ்லிம்களின் மசூதிகளில், முஸ்லிம்கள் அதிகமாக பயணித்த ரயிலில் இதில் செத்தது அனைவரும் முஸ்லிம்களே. இப்படி இருந்தும் காவல்துறை இந்த வழக்கில் முதலில் கைது செய்தது முஸ்லிம்களைத்தான் பின்னர் இந்த வழக்கு 2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சுவாமி அசிமானந்தா, பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், இந்திய ராணுவ லப்டினட் கர்னல் புரோகித், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் ஜோசி, மற்றும் ராஜேஷ் சவுத்திரி, சமந்தர் சிங், கேரளாவை சேர்ந்த சுரேஷ் நாயர், ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக பிடிபட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய பல ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு துறை தேடிவருகிறது.

இந்தியாவில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் துணை அமைப்புகளான, பஜ்ராங்க்தல், அகில பாரதிய வித்தியாதி பரிசத் ( ABVB) இந்து ஜாக்ரன் மன்ஞ்ச் ஆகிய இயக்கங்களின் தொடர்புகள் வெளிவந்தன. இந்த வழக்கில் பிடிபட்டு சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் மேற்கூறிய இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது.

இந்நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்தின் தேவாஸில் உள்ள காட்டுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த குண்டு வெடிப்புகளை நடத்துவதற்கு முன்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் காடுகளில் உள்ள தங்களது ரகசிய முகாம்களில் சோதனை நடத்தியிருந்தனர்.

எனவே இதுத்தொடர்பான ஆதாரங்களை மற்றும் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க தேசிய புலனாய்வு துறை காடுகளில் கடும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்த வெடிக்குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக திகழ்ந்தவரும் ( குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெயர் வெளிவராமல் இருக்க) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் மற்றும் இதற்க்கு பண உதவி செய்தவருமான சுனில் ஜோசியை கொன்ற பல்பீர் சிங்கையும் தேசிய புலனாய்வு துறை இந்த தேடுதல் வேட்டைக்கு அழைத்து வந்திருந்தது.

இந்தூரில் மண்டல்வாடா கிராமத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை பல்பீர் சிங் கைது செய்யப்பட்டான். ஜோஷியின் நெருங்கிய நண்பனும், கொலையில் குற்றவாளிகளில் ஒருவனுமான ஜிதேஷ் பட்டேலின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. பல்பீர் சிங்கின் வீட்டில் இருந்து 9 MM பிஸ்டலின் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் மீதமுள்ள தோட்டக்களை உபயோகித்து ஜோஷி கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

குராதியாராவு காட்டுப் பகுதியில் இந்த சோதனை நடந்தது. மேலும் தேவாஸின் தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள "மோ" காட்டுப் பகுதியில் இன்னொரு சோதனை நடந்தது.. ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய புகலிடமாக திகழும் தீபால்பூரில் இருந்து முன்னர் கைதுச் செய்யப்பட்ட கமால் சவுகான் என்ற தீவிரவாதியை அழைத்து வந்து இங்கு சோதனை நடத்தப்பட்டது.


நக்கீரன், ஆனந்த விகடன், மனுஷ்ய புத்திரன், ஜே.பி.ஜோஸபின் பாபா, பாரதி தம்பி ஆகியோருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க விவாத அழைப்பு:



எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் இஸ்லாத்தை கொச்சைபடுத்தலாம் என அலையும் நக்கீர மனுசபுத்திர வகையராக்கல் சவுதியில் நிறைவேற்றப்பட்ட மரனதண்டனையை மையமாக வைத்து இஸ்லாத்தை விமர்சித்து வருகிரார்கள்

அவர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ வந்து தவ்ஹித்ஜமாத்தோடு நேருக்கு நேர் விவாதம் செய்து அவர்கள் சொல்வது சரியானதுதான் என நிறுபிக்க தயாரா? என தவ்ஹித்ஜமாத் சவால்விடுத்துள்ளது. அதை எழுத்துபூர்வமாகவும் சம்மந்தபட்டவர்களுக்கு அனுப்பியுள்ளது

இதை ஏத்துகொண்டு விவாதத்திற்க்கு வருவார்களா? அல்லது தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி ஒழிவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகாஷ்தோட்ட வளாகத்தில் நடைபெற்ற பெண்கள் பயானுக்கு ஆர்வத்துடன் பெண்கள் திரண்டுவந்தனர்



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 18.01.2013 வெள்ளிகிழமை மாலை 4 மனியளவில் அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள் அதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் சொற்பொழிவாற்ரினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித் நூரில் தர்பியா



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.01.2013 அன்று காலை 10 மனிமுதல் 12 மனிவரை மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித் நூரில் நடைபெற்றது ஏராளமான மானவ மானவையர்கள் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்டவர்களுக்கு முகம்மது மீரான் [கட்டிநாநா] அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் கிளை 1 சார்பாகா மாற்றுமத சகோதரருக்கு தாவா


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.01. 2013 அன்று மாற்றுமத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Sunday 20 January 2013

ரிசானா நபீக் என்ற பெண்ணிர்க்கு சவுதிஅரேபியாவில் மரனதண்டனை கொடுத்தை வைத்து இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை விமர்சிக்கும் மூடர்களுக்கு மௌளவி ரஸ்மின் அவர்களின் விளக்கம்


ரிசானா நபீக்கும், வெளிநாடு செல்லும் பெண்களும். (Video)

வெளிநாட்டு வேலை வாய்பை நாடி சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் என்ற பெண்மணி வீட்டு எஜமானியின் குழந்தையை கொலை செய்தார் காரணத்தினால் கடந்த 09.01.2013 அன்று சவுதி அரேபியாவில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் தொடர்பில் உலகம் முழுவதும் பலத்த விமர்சனங்களும், இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியல் தண்டனை தொடர்பாகவும் வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விதமாக பேசப்பட்ட உரை:


ரிஸானா நபீக்கும் வெளிநாடு செல்லும் பெண்களும் 02 by sltjvideos

Wednesday 16 January 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 வின் டிசம்பர் மாத வரவு சிலவு விபரம்



தவ்ஹித்ஜமாத்தின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உத்திரவிட்டுருப்பதாக தவ்ஹித்ஜமாத்திற்க்கு மாவட்ட கலெக்டர் தகவல்




முத்துப்பேட்டையில் நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் உடனடியாக மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றகோரியும்.ஊர் முழுவதும் மேய்ந்து திறியும் பன்றிகளை அகற்றகோறியும் முத்துப்பேட்டை பேருராட்சிக்கு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது இதன் நகல் மாவட்ட ஆட்சியருக்க்கும் அனுப்பப்பட்டது

இந்த கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் பேரூராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார் அவர் உத்தரவிட்ட நகலையும் நமக்கு அனுப்பியுள்ளார்

இதன் பிறகும் பேரூராட்சி மெத்தனம் காட்டினால் முத்துப்பேட்டை காவல்துரை எதிர் கொண்டது போல மிகப்பெறிய போரட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். என செய்கிறார்கள் என பொருத்து இருந்து பார்ப்போம்

Monday 14 January 2013

கொசுத்தொல்லையில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள்.கெமிக்கல் கொசுவர்த்தியை தவிர்ப்போம்! ஒரு கொசுவர்த்தி 100 சிகரட்டிர்க்கு சமம்



இன்று குறிப்பாக கிராமங்களிளும் நகரங்களிளும் இந்த பாழாய்ப் போன கொசுவை பற்றித் தான் பேச்சு. அன்றாட அரசியல் நிலவரங்கள் கூட அப்புறந்தான். எப்படி கொசுவிடமிருந்து தப்புவது என்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. நாமும் எத்தனையோ வழி முறைகளை செயல்படுத்தி இருப்போம். இந்தஉடலுக்கு கேடுவராத வழி முறைகளையும் பின்பற்றிப் பார்ப்போமே!

நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர் . அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால் , சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு , நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது ஒரு கொசுவர்த்தி 100 சிகரட் பிடிப்பதற்க்கு சமம் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட , வீட்டில் இருக்கும்
ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம் . இதனால் கொசுக்கள் அழிவதோடு , உடலும் ஆரோக்கியமாக இருக்கும் . அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போம்

தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் , வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது . எப்படியென்றால் தேங்காய் நார்கள் , வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு , வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது . எவ்வாறென்றால் , இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் , அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும் . தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது .
ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து , மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி , அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து , சிறிது நேரம் கழித்து பாருங்கள் , ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது . இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா ? என்று கேட்கலாம் . இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது .

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் , சல்பர் . இந்த சல்பர் எங்கு இருந்தாலும் , கொசுக்கள் வெளியில் தான் இருக்கும் . கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது . ஆனால் , ஒரு பிரச்சனை என்னவென்றால் , கற்பூரத்தை காற்றில் வைத்தால் , அது உடனே கரைந்துவிடும் .
ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து , எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால் , கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது . இல்லையென்றால் , ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் , அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது .

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த , கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும் . அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில்(Liquid Bottle) உள்ள காலி டப்பாவில் , கெரோசினை விட்டு , அதில் சிறிது கற்பூரத்தை விட்டு , மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும் . இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு , உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்

கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தவரையும் சிந்திக்க வைத்த அபுதாபிதவ்ஹித்ஜமாத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடு


இஸ்லாத்தைவிமர்சிப்பவருக்கும் அழகிய முறையில் இஸ்லாத்தை சொல்லவேண்டுமே தவிர அவரைவிட கீழ்தரமாக அவரைவிமர்சிப்பது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு கத்துதந்த வழிமுரையள்ள கீழே உள்ள அபுதாபி தவ்ஹித் ஜமாத்தின் செயல்பாடுகளை பார்த்து பாடம் படித்துகொள்வோம்



சக்திவேல் முதலியார் என்பவர் இஸ்லாத்தை குறித்து விமர்சனம் செய்வதனை சில சகோதரர்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்நிலையில் அவரை நேரடியாக போய் சந்தித்து தூய இஸ்லாத்தை எடுத்துரைப்போம் என நாம் முடிவு செய்த அடிப்படையில் சென்ற சனிக்கிழமை அன்று அபுதாபியிலிருந்து 125 கிமீக்கு அப்பால் இருக்கும் ஸ்வேஹான் சென்று அவரை நேரடியாக சந்தித்தோம்.

தனக்கு இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்ற வெறி எல்லாம் கிடையாது என்றும் சில முஸ்லிம் சகோதரர்கள் எங்கள் இந்து கடவுள்களை மிகவும் கொச்சையாக விமர்சித்த காரணத்தினால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டதால் தான் அவ்வாறு விமர்சித்தேன் என்றும் குறிப்பிட்டார். மேலும் அவரது குடும்பத்தை கூட விட்டு வைக்காமல் சிலர் விமர்சித்து உள்ளனர், இதே இடத்தில் படிக்காத பாமரன் ஒருவன் இருந்திருந்தால் அவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பான் அந்த அளவுக்கு தனது பிறப்பையும், தனது மனைவியையும் உங்கள் இஸ்லாமிய சகோதரர்கள் விமர்சித்துள்ளனர் என்று ஆதங்கப்பட்டார். இதன் விளைவுகள் தான் என்னையும் அசிங்கமான முறையில் கருத்திட வைத்து விட்டது. ஒருவர் அல்ல பலர் இப்படி கமெண்ட் செய்யும் போது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இப்படி தான் இருப்பர் போல என்று தான் எண்ணியதாகவும் குறிப்பிட்டார்.

அவரது ஆதங்கம் முழுவதனையும் கேட்ட பின்னர் தூய இஸ்லாத்தை குறித்து அவருக்கும் நாம் எடுத்து சொன்னோம். நல்ல முறையில் செவி தாழ்த்தி கேட்டார், சில சந்தேகங்களையும் கேட்டார். தான் 2009 வரை வின்டிவி நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்தவன் என்றும், சகோ.பீஜேவின் உரைகளை நான் ரசித்து கேட்பேன் என்றும் குறிப்பிட்டார்.

நம்முடன் வந்தவர்களில் சகோதரர் லுக்மான் ராஜா இஸ்லாத்தை தழுவியவர் ஆகும். அவர் இந்து சாஸ்திரங்கள், வேதங்கள் எல்லாவற்றை குறித்தும் “இஸ்லாம் தான் ஈருலக வெற்றிக்கு வழி” என்பதனை நான் புரிந்து கொண்டதால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என்று கூறிய போது மிகவும் உன்னிப்பாக அவர் கவனித்தார்.

“இஸ்லாமிய சகோதரத்துவம்” என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என்று அந்நேரம் குறிப்பிட்ட சகோதரருக்கு திருமறை குர்ஆன் மொழியாக்கம், மாமனிதர் மற்றும் வருமுன் உரைத்த இஸ்லாம் ஆகிய நூற்களை வழங்கினோம். அத்துடன் அபுதாபி மண்டலம் நடத்தும் 9வது பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டிக்கு அழைப்பு கொடுத்தோம். தான் கட்டுரை எழுத முயற்சிப்பதாகவும் எங்களிடம் அவர் தெரிவித்தார்.

இறுதியாக விடைபெறும் நேரம், “இஸ்லாம் குறித்து என்னிடம் இருந்த கெட்ட எண்ணத்தினை தங்களின் வருகை மூலம் என்னிடமிருந்து மாற்றி விட்டு செல்கிறீர்கள்” என்று குறிப்பிட்டது நமக்கு மகிழ்வை தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் இவருக்கு நேர்வழியை காட்ட நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.


Sunday 13 January 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக புக் வினியோகம்




தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பிறமத சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புக் வழங்கப்பட்டது ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித் நூரில் தர்பியா




தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா 13.01.2013 ஞாயிறு காலை 10 மனிமுதல் 12 மனிவரை மஸ்ஜித் நூரில் நடைபெற்றது ஏராளமான மனவ மானவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் கலந்து கொண்டவர்களுக்கு தாயி கட்டிநாநா அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Thursday 10 January 2013

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ரயில்பாதை மத்திய அரசு ஒப்புதல்




மக்களின் நீண்ட நாள் கனவான பட்டுக்கோட்டையில் டு தஞ்சாவூர் ரயில்பாதை திட்டத்திற்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

இந்த திட்டம் சுமார் 390 கோடி ரூபாய் சிலவில் செய்து முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் பன்சிலால் அறிவித்தார்

நீண்ட நாட்களுக்கு முன்பே வரவேண்டிய இந்த திட்டம் தனியார் பஸ் முதலாலிகளால் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தது இப்போதாவது அரசாங்கம் இதை செய்ய முன்வந்ததே என மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்

முத்துப்பேட்டை அகலரயிபாதை திட்டமும் இந்த திட்டமும் முடிவடைந்தால் முத்துப்பேட்டையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயனம் சிரமம் இல்லாமல் இருக்கும் இந்த திட்டங்களை கிடப்பில் போடாமல் போர்கால அடிப்படையில் விரைந்து முடிப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்

Tuesday 8 January 2013

சத்தியம் வென்றது! படிந்தது தமிழக அரசு ! சிறை நிறப்பும் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது





எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே தவ்ஹித்ஜமாத்தின் உறுதியான நிலைபாட்டையும் தவ்ஹித்ஜமாத் பக்கம் உள்ள நியாயத்தையும் தாமதமாக உனர்ந்து கொண்ட காவல்துரை சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தை தொடர்ந்து நாம் நடத்த இருந்த சிறைநிறப்பும் போராட்டம் விலக்கிகொள்ளபட்டது அல்ஹம்துலில்லாஹ் இது சம்மந்தமாக மாநில பொதுசெயளாளரின் அறிக்கை கீழே வெளியிடபட்டுள்ளது

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்று சிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது.

காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

மாநிலப் பொதுச் செயலாளர்

சத்தியம் வென்றது! படிந்தது தமிழக அரசு ! சிறை நிறப்பும் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது


எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே தவ்ஹித்ஜமாத்தின் உறுதியான நிலைபாட்டையும் தவ்ஹித்ஜமாத் பக்கம் உள்ள நியாயத்தையும் தாமதமாக உனர்ந்து கொண்ட காவல்துரை சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தை தொடர்ந்து நாம் நடத்த இருந்த சிறைநிறப்பும் போராட்டம் விலக்கிகொள்ளபட்டது அல்ஹம்துலில்லாஹ் இது சம்மந்தமாக மாநில பொதுசெயளாளரின் அறிக்கை கீழே வெளியிடபட்டுள்ளது

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்று சிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது.

காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

மாநிலப் பொதுச் செயலாளர்

Monday 7 January 2013

போலி தவ்ஹித் வேசம்போடும் ஜாக்! அம்பலத்துக்கு வரும் உன்மைகள்



தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கும்பகோணத்தில் இட ஒதிக்கீடு மாநாடு நடத்தப்பட்ட போது, நாகர்கோவில் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலில் ஜாக் இயக்கத்தின் உலக அமீரான கமாலுதீன் மதனி கீழ்கண்டவாறு பேசினார்.

"சிலர் மாநாடு என்றும் கோரிக்கை என்றும் சொல்கிறார்கள். மாநாடு என்றால் எது மாநாடு?? மக்காவிலே ஹரம் ஷெரிபுக்கு முன்னே கூடுமே லட்சோப லட்சம் - அது தான் மாநாடு. கோரிக்கை என்றால் எது கோரிக்கை? அல்லாஹ்விடம் கையேந்துகிறோமே அது தான் கோரிக்கை.

இவர்கள் என்னவென்றல் காபிர்களான கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் இவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அல்லாஹ்விடம் வைக்க வேண்டிய கோரிக்கையை காபிர்களிடம் வைக்கிறார்கள்."

அதே ஜாக் இயக்கத்தின் தற்போதைய நிலையை காண மேலே உள்ள படத்தை பார்க்கவும் தவ்ஹீத் வேடமிடும் சந்தர்ப்பவாதிகள் தான் இவர்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது.

Saturday 5 January 2013

முத்துப்பேட்டையில் நடந்த கண்டன ஆர்பாட்டம் சம்மந்தமாக பத்திரிக்கையில் வந்த செய்தி




மனித உரிமைமீரலையும் அதற்க்கு துனை போன காவல்துரையையும் கண்டித்து முத்துப்பேட்டையில் மிகப்பெரிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது அதை அனைத்து ஊடகங்களும் படம்பித்து சென்றது அதுமட்டுமல்லாமல் கண்டன உரையாற்ரிய மாநில பேச்சாளர் தாவுத் கைசரிடம் பிரத்தியோக பேட்டியும் வாங்கி சென்றனர்அதந்தொடர்ச்சியாக தினகரன் நாளிதளில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது

முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிவாசல் அருகில் தவ்ஹித் ஜமாத் கிளை 1 சார்பாக ஏகத்துவ பிரச்சாரம்



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 3.1.2013 வெள்ளிகிழமை மாலை முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிவாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

வட்டியை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிரது அது பெரும்பாவங்களில் ஒன்று என்பது தெளிவாக தெறிந்தும் வட்டி அடிப்படையில் டெப்பாசிட் செய்வதை ஆர்வமூட்டும் முகாமை துனிச்சலாக முஸ்லிம்தெருவில் அதுவும் குட்டியார் பள்ளிஅருகிலேயே நடத்த ஜமாத் வங்கிக்கு அனுமதி அளித்து இருந்தது

இதை கண்டித்தும் அப்பாவி மக்களுக்கு உண்மையை உனர்த்தும் விதமாகவும் உடனடியாக அதே இடத்தில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது

இதில் பேசிய மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் வட்டி என்றால் என்ன? அதற்க்கு நாம் ஆதரவு கொடுத்தால் நமக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுப்பான் அதிலும் ஒரு ஜாமாத்துக்கு பொருப்புதாரியாக உள்ளவர்கள் இதை செய்யலாமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அதற்க்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமும் கொடுத்தார்

இதை ஆர்வமுடன் கேட்ட பெரும்பான்மையான மக்கள் நல்ல நேரத்தில் எங்களுக்கு விழிப்புனர்வு கொடுத்தீர்கள் தொடர்ந்து இதே போல பனி செய்யுங்கள் என ஆர்வமூட்டினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 1 January 2013

அநியாயத்திற்க்குஎதிராகதிரண்டுவந்தபெண்கள் ! முத்துப்பேட்டை முழுவதும் மக்கள் வெள்ளம் ! அனைத்துதரப்பு மக்களையும் சிந்திக்கவைத்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம் !










நபிவழியில் ஜனாசவை அடக்கம் செய்துவிட்டு வந்தவர்களை சுத்திவலைத்து தாக்க முற்பட்டவர்கள் மீது கொடுத்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துரை புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்த அநியாயத்தை கண்டித்து 31.12.2012 மலை 4 மனியளவில் முத்துப்பேட்டை பழையபேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

அதில் கண்டன உரையாற்றிய மாநில பேச்சாளர் தாவுத்கைசர் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துரை அதிகாரி அதை செய்யாமல் புகார் கொடுத்தவர் மீதே வழக்கு பதிவு செய்ததின் மூலம் அவர் கான்ஸ்டபிலாக இருக்ககூட லாயக்கு இல்லாதவர் என்பதை நிறுபித்துள்ளார் என கவல்துரை அதிகாரியை ஒரு பிடி பிடித்தார்

நாங்கள் அல்லாஹ்வை தவிர யாருக்கும் பயப்படமாட்டோம் இதே அரபுசாஹிப் பள்ளிமையவாடியில்மறுபடியும் மையத்தை அடக்கம் செய்வோம் நீங்கள் ரானுவத்தையே நிறுத்தினாலும் எங்களை தடுக்க இயலாது என சவால் விட்டார்

இது எங்களின் உரிமை எங்கள் உரிமையை யாருக்காகவும் பயந்து விட்டு கொடுக்க மாட்டோம் அரபு சாஹிப்பள்ளி யார் அப்பன் வீட்டு சொத்தும் அல்ல அதில் எங்களுக்கும் உரிமை உள்ளது என்பதை தெளிவுபடுத்தி ஆவேசமாக பேசினார்

நியாயத்திர்க்காக ஆன்களும் பெண்களும் ஆயிரக்கனக்கில் திரண்டு வந்து இருந்தனர் இனியாவது சம்பந்தபட்டவர்கள் திருந்துவார்களா? அல்லாஹ்விடம் துவா செய்வோம்

காவல்துரை அதிகாரிகள் தவறு செய்தவர்களை தண்டிப்பதோடு அப்பாவிகள் மீது போட்ட பொய்வழக்கை திரும்ப பெற்று தாங்கள் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடுவார்களா? பொருத்து இருந்து பார்ப்போம்