Wednesday 31 July 2013

மஸ்ஜித்நூரில் நிர்வாகிகள் மசூரா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மஸ்ஜித் நூரில் நடைபெற்றது

இதில் பெருநாள் முடிந்த அடுத்த நாள் மக்கள் இனைவைப்பின் கேந்திரமான கந்தூரிக்கு செல்லாமல் நன்மையின் பக்கம் மக்களை அழைக்க வசதியாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது

மஸ்ஜித்நூரில் கடைசி 10 நாட்கள் நடு இரவு தொழுகைக்கு ஆர்வத்துடன் திரண்டுவந்த மக்கள்



ரமலான் மாதத்தின் புனிதமிக்க லைலத்துல் கத்ர் இரவில்நன்மைகள் செய்து அதன் நன்மையை முழுவதும் அடைவதற்க்கு வசதியாக தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித் நூரில் கடைசி 10 நாட்களும் இரவு முழுவதும் இபாதத் செய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டது

இரவு 12 மனிக்கு இரவு தொழுகையும் அதை தொடர்ந்து பயானும் அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் களந்து கொண்டனர்

இரவு முழுவதும் வனக்க வழிபாட்டில் இருந்த மக்கள் நோன்பு நோற்க்க வசதியாக சகர் உனவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பெண்கள் சென்றவருடத்தைவிட அதிக என்னிக்கையில் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Monday 29 July 2013

SDPI யின் லட்சனம் கேரளாவில் சந்தி சிரிப்பதை பாரீர்!! இதுவும் முஸ்லிம் அமைப்புதான் நம்பினால் நம்புங்கள்


இந்தவார ஜீவியில் பிஜெ அவர்களின் பேட்டி!!

பாகிஸ்தான் தீவிரவாதியை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தாதீர்கள்!-
வெடிக்கும் ஜைனுல் ஆபிதீன் (ஜூனியர் விகடன் பேட்டி)


''இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''

''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.''

''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?''

''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும்போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''


''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''

''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது. நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச்செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது. தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட
இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தபோதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைதுசெய்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர்தான், தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.

தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம். இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''

''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''

''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது. ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பான்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்? நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலைசெய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.''

வீடு தீ பிடித்து எரிந்த சகோதரருக்கு வீட்டை சரிசெய்ய நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.07.2013 அன்று திருத்துரைபூண்டி பகுதி செங்களடியை சேர்ந்த வீடு எரிந்த சகோதரர் ஒருவருக்கு அவர் வீட்டை புரனமைப்பு செய்ய நிதி உதவியாக 3.570 ரூபாய் வழங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டதாயி அவர்களுக்கு நிதி உதவி

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.08.2013 தஞ்சாவூர் மாவட்ட தாயி அவர்களுக்கு ரூபாய் 2.700 வழங்கப்பட்டது

மாநிலதலைமைக்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.07.2013 அன்று மாநில தலைமைக்கு 7 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது

Saturday 27 July 2013

ரமலான் முடிந்த அடுத்த நாளே கந்தூரியில் ஆட்டம்போடும் முத்துப்பேட்டை முஸ்லிம்களே ! ரமலானில் நீங்கள் படித்த பாடம்தான் என்ன?


ரமலான் மாதம் முழுவதும் நோன்பு பிடித்து இரவல்லாம் நின்று வனங்கி மறுமைக்காக சம்பாரித்த அனைத்து நல்ல அமல்களையும் பெருநாள் முடிந்த அடுத்த நாள் அரவியப்பா கந்தூரில் பரக்கவிடுவது கைசேதமல்லவா?

தவ்ஹித்ஜமாத்தை எதிர்க்க கச்சை கட்டிகொண்டு களம்கானும் முத்துப்பேட்டை பள்ளிவாசல் இமாம்களே இந்த கந்தூரி பாவமான செயல் என சொல்ல தயக்கம் ஏன்? அதில் போய் நீங்களும் பாதியா ஓதுவது சரியா? அவர்கள் தரும் அர்ப்ப காசு நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் இருந்து உங்களை தடம் புரள செய்துவிட்டதா?

எவனோ விநாயகர் ஊர்வலத்தில் வேட்டியை தூக்கி கொண்டு ஆடுகிரான் என்பதற்க்காக நானும் கந்தூரியில் வேட்டியை தூக்கி கொண்டு ஆடுகிறேன் என சொல்லும் அப்பாவி இளைஞர்களே நரகத்து கொள்ளிகட்டையான அவனும் நீங்களும் ஒன்னா?

முஸ்லிகளை பார்த்து பாடம் படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள பலபேர் இஸ்லாத்தை நோக்கி வரும்போது நீங்கள் அவனை பார்த்து பாடம் படித்து நரகத்தை நோக்கி போவது சரியா?

ஊர்ஜமாத் நிர்வாகிகளே! நடு நிலை வேசம் போடுபவர்களே! அந்த சனிக்கிழமை கூட்டதை நினைத்து பாருங்கள். அநியாயம் செய்தவனும் அநியாயத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்தவனும் அல்லாஹ்வின் பார்வையில் ஒன்னுதான் அந்த முழு ஹதீசையும் உங்கள் பள்ளி இமாமிடம் கேட்டு தெறிந்து கொள்ளுங்கள்

அதிலும் நீங்கள் ஒருபடி மேலே போய் அநியாயத்தை எதிர்க்கும் தவ்ஹித் ஜமாத்தை எதிர்க்கிரீர்கள் .தவ்ஹித்ஜமாத்தை எதிர்பதாக நினைத்து கொண்டு இனைவைப்பிர்க்கு துனை போகிறீர்கள் சிந்தியுங்கள் சகோதரர்களே

நீங்கள் தாகித்து இருப்பதோ பட்டினி கிடப்பதோ அல்லாஹ்வுக்கு தேவையில்லாதது இறையச்சம் ஒன்னுதான் நம்மை கரை சேர்க்கும் அந்த இறையச்சத்தை அதிகம் பெறகூடிய இந்த ரலான் மாதம் முடிந்த அடுத்த நாளே கந்தூரி தேவையா?அதில் போடும் ஆட்டம் தேவையா? அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

Friday 26 July 2013

டெலிபோன் டவர் மிரட்டலுக்கு காவல்துரையின் பாரபட்சமே காரனம், முத்துப்பேட்டையில் நடக்கும் பலபிரச்சனகளுக்கு காரனம் காவல்துரையின் மெத்தனப்போக்குதான்.

முத்துப்பேட்டையில் டெலிபோன் டவரில் இருந்து தற்கொலை பன்ன போவதாக மிரட்டிய விடுதலை சிறுத்தை கட்சியினர் சம்மந்தமாக எழுதியிருந்தோம்

தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஒரு நிர்வாகி பொது இடத்தில் வைத்து வெட்டபடுகிறார் ஆனால் பல நாட்கள் ஆகியும் வெட்டியவரை காவல்துரை கைது செய்யவில்லை

அநியாயமாக தாக்குதல் நடத்தியவர் சங்பரிவார் கும்பலை சேர்ந்தவர் என்பதால் காவல்துரை வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் கருத்து தெறிவிக்கிறார்கள் இதே சங்பரிவாரை சேர்ந்தவர் வெட்டப்பட்டு இருந்தால் அவர்களை திருப்தி படுத்துவதற்க்காக அப்பாவி முஸ்லிம்களை இரவோடு இரவாக  வீடு புகுந்து கைது செய்து இருப்பார்கள் என்றும்மக்கள் பேசி கொள்கிறார்கள்

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதில் காட்டும் அக்கரையை ஒரு முஸ்லிமோ தாழ்த்தப்பட்டவனோ  கொலை செய்யப்படும் போதும் காட்டினால் நாடு உறுப்படும்

 தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு ஒழுங்காக இருக்கும்

சங்பரிவாருக்கு மட்டும் சலுகை காட்டுவதால் அவர்கள் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவருகிறார்கள்

 இனியாவது  யாரும் மறுபடியும் டெலிபோன் டவரில் ஏறாமல் முன்கூட்டியே காவல்துரை நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுமா? பொருத்து இருந்து பார்ப்போம் 

Thursday 25 July 2013

பரபரப்பானது முத்துப்பேட்டை, டெலிபோன் டவரிலிருந்து குதிக்கப்போவதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டல்


பரபரப்பிர்க்கு பஞ்சமில்லாத முத்துப்பேட்டையில் இன்று விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டுபேர் டெலிபோன் டவர்மீது ஏறிகொண்டு குதிக்கப்போவதாக மிரட்ட ஆரம்பித்ததும் ஊர் முழுவதும் இந்த செய்தி பரவி தீயனைப்பு வாகனம் போலீஸ் அதை பார்க்க மக்கள் என பரபரப்பானது

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகி வெட்டப்பட்டார் அதை இதுவரை கண்டுபிடித்து வெட்டிய நபரை தண்டிக்காத காவல்துரையை கண்டித்து இந்த தற்கொலை மிரட்டல் என பேசப்படுகிரது தற்கொலை செய்வாரா? மிரட்டலோடு இறங்கிவிடுவாரா பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும்


Monday 22 July 2013

மஞ்சக்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சகோதரரை நேரில் சந்தித்து ஆறுதல்

தமிழ்நடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.07.2013 அன்று மஞ்சக்காமாலை நோயால் அவதிபட்டுவரும் சகோதரர் அபு ஆப்ரின் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறப்பட்டது

மிகவும் சுருசுருப்பாக பொது சேவைகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டு முத்துப்பேட்டை இனையதளத்தின் நிருபராகவும் முத்துப்பேட்டை கல்விமையத்தின் பொருப்பாளராகவும் இருந்துவந்த சகோதரர் அபு ஆப்ரின் அவர்கள் பூரன குனமடைய நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்வோம்

மஸ்ஜித்நூரில் பித்ரா சம்மந்தமான ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.07.2013 அன்று பித்ரா சம்மந்தமாக கிளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மஸ்ஜித்நூரில் நடைபெற்றது அதில் ஒரு நபருக்கு பித்ராவின் அளவுக்கான தொகை 100 ரூபாய் என முடிவு செய்யப்பட்டுள்ளது

வெளிநாட்டில் உள்ள மற்றும் வெளியூரில் உள்ள முத்துப்பேட்டை சகோதரர்கள் இதை தங்கள் வீடுகளுக்கு தெறியப்படுத்தி முறையாக ஏழைகளுக்கு பித்ராவை வழங்கி அதற்க்கான கனக்கு வழக்குகளை முறையாக மக்களுக்கு காட்டி தனது தூய்மையை வருடா வருடம் நிறுபித்துவரும் தவ்ஹித்ஜமாத்தில் உங்கள் பித்ராவை கொடுத்து கடமையை நிறைவேற்றுமாறு கேட்டு கொள்கிறோம்

இஸ்லாத்திற்க்கு புதிதாக வந்த சகோதரருக்கு மாமனிதர் புக் இலவசமாக வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.07.2013 அன்று சமீபத்தில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரர் அதன் பிறகு பள்ளிவாசலோடு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தவரை நேரில் சந்தித்து தொழுகையின் அவசியத்தை எடுத்து சொல்லி அவருக்கு தாவா செய்து மாமனிதர் புக்கும் இலவசமாக வழங்கப்பட்டது

Friday 19 July 2013

விதைவிதைத்தவர் ஒருவர்? அதை அறுவடை செய்ய துடிப்பவர் பலபேர் ரயில்வேரிசர்வேசன் வர காரனம் யார்?அடுக்கடுக்கான ஆதாரங்கள்

முத்துப்பேட்டையில் ரயில்வே ரிசர்வேசன் மூடப்பட்டதும் அதற்க்காக களத்தில் இறங்கி வேலை செய்தது தன்ஹித்ஜமாத் தான் அதன் பலனாக இப்போது முத்துப்பேட்டையில் ரயிவே ரிசர்வேசன் அமைக்கப்பட்டுள்ளது

இதை தொடர்ந்து வழக்கம்போல அனைத்து தரப்பினரும் எங்களால்தான் ரயிவே ரிசர்வேசன் வந்தது என தம்பட்டம் அடிக்க ஆரம்பித்து போஸ்டரும் பிட் நோட்டீசுமாக ஊரை ஏமாத்த தொடங்கியுள்ளார்கள்

நமக்கு தேவை காரியம் நடக்கவேண்டும் அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம்தான் பெறவேண்டும் என்பதால் நாங்கள்தான் கொண்டு வந்தோம் என பொருளாதாரத்தை வீன் விரயம் செய்து போஸ்டர் அடிக்க விரும்பவில்லை இருந்தாலும் நாம் செய்த ஒன்றை வைத்து வேறு ஒருவர் ஆதாயம் அடைய கூடாது என்பதற்க்காக ஆதரங்களை வெளியிடுகிறோம்

நடுநிலையான சகோதரர்கள் இதை அதிகம் அதிகம் மக்களுக்கு கொண்டு செல்லவும் உழுகும்போது ஊரை சுத்திவிட்டு அறுவடை காலத்தில் அரிவாளை தூக்கிவந்த கதைதான் நம் யாபகத்திற்க்கு வருகிரது

ஆதாரம் 1
 நாம் முதல் முதலில் இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊர் முழுவதும் ஒட்டிய லித்தோஸ் போஸ்டர் அப்போது நம் இனையதளத்தில் வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/10/blog-post_1461.html


ஆதாரம்  2
இந்த கோரிக்கையை வழியுறுத்தி முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் திருச்சி சென்று டிவிசனல் ரயிவே மேனேஜரை சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில் அது சம்மந்தமாக வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/10/blog-post_6081.html



ஆதாரம் 3
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வழியுறுத்தி தொகுதி எம் பி ஏகேஎஸ் விஜயன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில்  அது சம்மந்தமாக   வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/12/aks.html


ஏற்க்கனவே விநாயகர் ஊர்வலப்பிரச்சனையில் களப்பனி முழுவதும் தவ்ஹித்ஜமாத் செய்தும் நோகாமல் வேறு ஒருவர் நொங்கு குடித்துவிட்டு போன மாதிறி இதுவும் ஆகிவிட கூடாது என்பதால்தான் இந்த விளக்கம் அல்லாஹ்போதுமானவன்





கருப்பு கயிறு அறுத்து எறியப்பட்டது தூய்மையான இஸ்லாத்தை சொல்லி தாவா செய்யப்பட்டது



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.07.2013 அன்று புதிதாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு தூய இஸ்லாத்தை பின் பன்பற்றுவது பற்ரி எடுத்து சொல்லப்பட்டது

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு யாரும் அதன் தூய்மையான வடிவில் இஸ்லாத்தை எத்தி வைக்காததால் பழைய படியே கையில் கருப்பு கயிறு திருஸ்ட்டிக்காக அனிந்து இருந்தார்கள்

இந்த காயிறு எதுவும் செய்ய சக்தி இல்லாதது இது வெரும் கயிறுதான் அல்லாஹ்தான் அனைத்தையும் செய்பவன் அன்வன் நாடியதை எதுவும் தடுக்க இயலாது அவன் நாடாமல் எந்த பொருலாளும் எதுவும் செய்ய இயலாது என்பதை விளக்கி கையில் கட்டியிருந்த கருப்பு கயிருகளை அவர்கள் அனுமதியோடு அறுத்து எரியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Thursday 18 July 2013

அகல ரயில்பாதைதிட்டமும் அநியாயமாக வஞ்சிக்கப்படும் முத்துப்பேட்டையும்


ரயில்வேதுறை இந்தியாவில் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகளையல்லாம் பிராட்கேஜ் அதாவது அகல ரயில் பாதையாக மாற்றவேண்டும் என திட்டம் போட்டு அதற்க்காக நிதி ஒதுக்கி பல வருடங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிரது

இந்தியாவிலே கிட்டத்தட்ட அனைத்து குருகிய ரயில் பாதைகளும் அகலரயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன ஆனால் இந்த திருவாரூர் முதல் பட்டுக்கோட்டைவரை உள்ள ரயில் பாதை மட்டும் கிடப்பிலே  போடப்பட்டு வருகிறது

மீட்டர்கேஜ் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றும் அதே நேரத்தில் புதிதாக பல இடங்களில் ரயில் பாதைகளும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது அதே நேரத்தில் ஏற்க்கனவே உள்ள மீட்டர்கேஜை பிராட்கேஜாக மாற்றதான்முதலில் முன்னுரிமை கொடுக்கனும் என்றும் அறிவுறுத்தப்பட்டது

ஆனால் அதற்க்கு நேர் மாற்றமாக திருவாரூர் முதல் வேளாக்கன்னி மற்றும் திருவரூர் முதல் மன்னார்குடி போன்ற புதிய ரயில் பாதைக்கு முன்னுரிமை கொடுத்து பழைய ரயிபாதையை கேட்பாரற்று கிடப்பில் போட்டுவிட்டார்கள்

இதற்க்காக போராட்டம் நடத்த முத்துப்பேட்டையில் ஒரு குழு அமைக்கப்பட்டது ஒரு குழு அமைத்து ஏதொ செய்ய முயற்ச்சி செய்யும் போது நாம் குறுக்குசால் ஓட்ட கூடாது என தவ்ஹித்ஜமாத் அமைதிகாத்தது

அந்த குழுவுக்கு தலைவராக போட்டவரை பார்த்ததுமே இது விளங்காது என நமக்கு புறிந்தது ஏன் என்றால் சில வருடத்திற்க்கு முன்பு வினாயகர் ஊர்வல பிரச்சனையில் இந்த நபர் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என ஊரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் கையழுத்து போட்டு இவரை நீக்கினார்கள்

 தவ்ஹித் ஜமாத் மட்டும்தான் இவர் தவ்ஹித்ஜமாத்துக்கு நேர் எதிரியாக இருந்தும் இவர் துரோகம் செய்ததற்க்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே இவரை நீக்கும் பிரச்சனையில் உடன்படுவோம் என எழுதி கையெழுத்து போட்டது

அப்படி நீக்கிய ஒருத்தருக்கு ரீ இண்டரி கொடுத்து இந்த குழுவுக்கு தலைவராக போட்டு போராட்டம் எல்லாம் நடத்தினார்கள் எதுவுமே வீரியமிக்கதாக அரசாங்கத்தை ஆட்டம்கான வைக்கும் வகையில் அமையவில்லை

திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரை இந்த ரயில் போகும் வழியில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லிம்மக்களும்தான் இதனால்தான் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது

சென்றவருடம் திடீர் என்று இரண்டு லோடு இரும்பு தண்டவாளங்கள் வந்து இறங்கியது ஏன் எதற்க்கு என்று தெறியும் முன்பே நம் ஊரில் உள்ள ஒரு கட்சியினர் சுவீட் வாங்கி சென்று அங்குள்ளவர்களுக்கள்ளாம் கொடுத்து ஏதோ பிராட்கேஜ் போட்டு ரயில் விட்டு விட்ட மாதிரி கொண்டாடினார்கள் இரும்புதண்டவாளம் வந்து இறங்கியதற்க்கு சுவீட் கொடுத்து கொண்டாடிய ஊர் உலகத்திலேயே முத்துப்பேட்டையாகதான் இருக்கும்

இப்படியே போனால் இதற்க்கு என்னதான் தீர்வு? ஒரு காலத்தில் ரயில் முத்துப்பேட்டைக்கு வந்தது என நம் சந்ததிகள் சொல்லும் நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்களோ ?என்ற என்னம் அனைத்து மக்களிடமும் எழுந்துள்ளது

 நோன்பு முடிந்தும் இதே நிலை நீடித்தால் தவ்ஹித் ஜமாத் மாநில தலைமையோடு ஆலோசனை செய்து இதற்க்கு ஆவன செய்யலாம் என முடிவு செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 17 July 2013

பார்வையாளர் என்னிக்கையில் 20 ஆயிரத்தைதாண்டிய நமது இனையதளம்

அன்பான சகோதரர்களே தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 வின் அதிகாரப்பூர்வமான இனையதளமான http://www.tntjmtt.blogspot.com/ இந்த இனையதளம் ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதன் பார்வையாளர் என்னிக்கை 20ஆயிரத்தை தாண்டிவிட்டது அல்ஹம்துலில்லாஹ் இன்னும் மேலும் சிறப்பாக அதன் செயல்பாடுகள் அமைய துவா செய்யுங்கள்

Thursday 11 July 2013

மஸ்ஜித்நூரில் நோன்புதிறக்க மக்களுக்கு நோன்புகஞ்சி வழங்கப்பட்டது

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11.07.2013 அன்று நோன்புதிறப்பதற்க்காக இலவசமாக நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது
ஏராளமான ஆன்கள் பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்




மஸ்ஜித் நூரில் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகளின் அவசர மசூரா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.07.2013 அன்று இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் நூரில் நிர்வாகிகளின் அவச மசூர நடைபெற்றது
அதில் முதல் நாளே இரவுத்தொழுகைக்கு பெண்கள் பகுதி நிறைந்துவிட்டதால் நாளை தொழுக வரும் பெண்களுக்கு இடம் ஏற்பாடு செய்வது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நான்கு கடைகளில் மறைவு ஏற்படுத்தி அங்கு இடவசதி செய்வது என முடிவு செய்யப்பட்டது

Wednesday 10 July 2013

மஸ்ஜித்நூரில் இரவுத்தொழுகையும் ரமலான் தொடர் சொற்பொழிவும் தொடங்கியது

 தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.07.2013 அன்று இரவு மஸ்ஜித்நூரில் இரவு தொழுகை நடைபெற்றது
அதை தொடர்ந்து நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் கொவை மாவட்ட தாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள் உரையாற்றினார்கள் ஏரளமான ஆன்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடந்தனர்