Monday 30 December 2013
Wednesday 25 December 2013
அல்லாஹ்வின் உதவியால் பலதடைகளை மீறி வீரியமாக நடந்துவரும் தவ்ஹித்மர்கஷ் கட்டிட வேலைகள்
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 ஆசாத்நகரில் தவ்ஹித்ஜமாத்தின் மர்கஷ் அமைக்கும் வேலைகள் 6 மாதத்திற்க்கு முன்பு தொடங்கியது
நமது சொந்த பட்டா இடத்தில் நாம் மர்கஷ் கட்டுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் எந்த முகந்திரமும் இல்லாமல் தனக்கு உள்ள பிரத்தியோக அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்துவதற்க்கு உத்திரவிட்டார்
எதுவக இருந்தாலும் ஜனநாய வழியில் தீர்வு கான வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நமது ஜமாத் இந்த பிரச்சனையையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்வது என முடிவு செய்து கட்டிட வேலைகளை நிறுத்திவிட்டு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்தது.ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த ஆட்சியரை எதிர்த்து ஆர்பாட்டமும் செய்தது
அல்லாஹ்வின் உதவியால் மாவட்ட ஆட்சியர் போட்ட உத்திரவு செல்லாது கட்டிட வேலைகளை தொடர்ந்து செய்யலாம் என ஐகோர்ட் உத்திரவிட்டது
நமது நாட்டின் மிக பெறிய சக்தியான கோர்ட் தீர்ப்பு சொன்ன பின்பு அந்த தீர்ப்பின் நகல் நம் கைக்கு கிடைத்த பின்பு நாம் மர்கஷ் வேலைகளை தொடங்கினோம்
கூலிக்கு வேலை செய்யும் ஆட்கள் அல்லாமல் நமது சகோதரர்களும் இரவு பகலாக அங்கு வேலை செய்துவருகிரார்கள் மறுபடியும் வேலை ஆரம்பித்து இந்த ஐந்து நாட்களில் அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களும் அச்சுருத்தல்களும் அதிகமாகவே உள்ளது
நாம் ஜனநாயக ரீதியாக நடந்துவருகிறோம் ஜனநாயகத்தி நிலை நாட்ட வேண்டிய அதிகாரிகள் கோர்ட் உத்திரவைகூட மதிக்காமல் சில தனிப்பட்ட நபர்களை திருப்தி படுத்துவதில் மும்முரமாக இருப்பது வேதனையான தரக்கூடியதாக உள்ளது
நாம் மாநில மாவட்ட தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் சட்டத்திற்க்கு உட்பட்டு நமது பனிகளை செய்துவருகிறோம்.இதற்க்கும் தொடர்ந்து இடையூறு செய்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு மக்கள் சக்தியை திரட்டி மிக பெறிய போராட்டத்தை செய்ய வேண்டி இருக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிகொள்கிரோம்.
Tuesday 24 December 2013
Monday 23 December 2013
ஜனவரி 28 போராட்ட விழிப்புனர்வு தாவா முத்துப்பேட்டை முழுவதும் வீடுவீடாக சென்று வீரியமாக நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.12.2013 அன்று ஜனவரி 28 சிறை நிறப்பும் போராட்டத்தில் நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கி முத்துப்பேட்டை முழுவதும் தெற்க்கு தெரு,சின்னகட்சி மரைக்காயர் தெரு, மரைக்காயர் தெரு, பேட்டை ரோடு போன்ற பகுதிகளில் காலை முதல் மாலை வரை வீடு வீடாக சென்று தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Saturday 21 December 2013
Monday 16 December 2013
Sunday 15 December 2013
ஜனவரி 28 திருச்சி சிறையை நிறப்ப கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
ஜனவரி 28 அன்று நடைபெற உள்ள சிறைசெல்லும் போராட்டம் சம்மந்தமான செயல்வீரர்கள் கூட்டம் மாநில மேலான்மை குழு பக்கீர்முகம்மது அல்தாபி தலைமையில் 15.12.2013 அன்று கூத்தாநல்லூரில் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டை கிளை 1ல் இருந்து 22 செயல்வீரர்கள் கலந்துகொண்டனர் கிளை 1 செயளாலர் முகம்மது புகாரி அவர்கள் இதுவரை செய்துள்ள பனிகள் குறித்து விளக்கமளித்தார் இறுதியில் சகோ பக்கீர்முகம்மது அல்தாபி அவர்கள் உரையாற்ரினார்கள்.பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
Saturday 14 December 2013
ஒரே நாளில் சித்தமல்லி,பாலவாய்,பெருகவழந்தான்,பேட்டை ஆகிய நான்கு கிராமங்களில் ஜனவரி 28 விழிப்புனர்வு பிரச்சாரம்,
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.12.2013 அன்று ஒரே நாளில் இரண்டு குழுவாக பிறிந்து சித்தமல்லி, பாலவாய், பெருகவாழ்ந்தான்,ஆகிய நான்கு கிராமங்களில் காலை முதல் இரவுவரை ஜனவரி28 போராட்டம் சம்மந்தமாக விழிப்புனர்வு பிரச்சாரம் மற்றும் தொழுகை சம்மந்தமாக தாவாசெய்யப்பட்டது
இதில் பெருகவாழ்ந்தான் கிராமத்தில் ஜூம்மா தொழுக சிரமமாக இருப்பதாகவும் உள்ளூரிலேயே ஜும்மா தொழுக ஏற்பாடு செய்துதரும்படி கோரிக்கைவைத்துள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் ஆலோசனைசெய்து ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்கள்
Subscribe to:
Posts (Atom)