Wednesday 27 February 2013

ஐந்துகோடி ரூபாய் அளவுக்கு கல்வி உதவிதொகை வழங்க தவ்ஹித்ஜமாத் முடிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 11.02.13 அன்று மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் 2013 – 14ஆம் ஆண்டில் ரூ.5 கோடி அளவிற்க்கு கல்வி உதவி வழங்க தீர்மானம் செய்யப்பட்டது. மேலும் இந்த செய்தி பத்திரிகையில் வெளியானது.

Monday 25 February 2013

அவதூறுமன்னர்கள் ஆதாரத்தை தருவார்களா


பிஜெயை பற்றி அவதூறு எழுதுவதற்க்காவே இயக்கம் நடத்தி கொண்டு அதற்க்கு மண்டலத்திற்க்கு மண்டலம் பொறுப்பாளர்கள்வேறு வெக்கக்கேடு!!!

ஒரு ஒரு தடவை அவதூறு பரப்பி பின்பு அதை நிறுபிக்க முடியாமல் மக்களிடம் செருப்படி பட்டும் கொஞ்சம்கூட வெட்கப்படாமல் மீண்டும் மீண்டும் அவதூறு பரப்புவர்களை எந்த ஜென்மத்தில் சேர்ப்பது

இப்போது பாமரன் என்ற புனைபெயரில் ஒருத்தன் எடுத்த வாந்தியை முத்துப்பேட்டை மைதீன் தூக்கிகொண்டு பரப்ப கிளம்பியுள்ளார்

பிஜெ அவர்கள் சவுதிக்கு போக தடை இருப்பது தெறிந்தும் எப்படியாவது உம்ரா விசாவில் சவுதிக்கு போய்விடலாம் என போனார் ஜித்தா ஏர்போட்டில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 2 மனிநேரம் விசாரனை செய்து இந்தியாவுக்கே திரும்ப அனுப்பிவிட்டார்கள் இதை ஜித்தாவில் வேலை செய்யும் அமீர்ஜான் பார்த்தார் விரைவில் போட்டோவும் ஆடியோவும் ஆதரமாக வெளியிடப்படும் இதுதான் புதிதாக பரப்பியுள்ள வதந்தி

நாம் மனதில் என்ன என்ன நினைக்கிறோமோ இது நடந்தால் நன்றாக இருக்குமே என கற்பனை செய்கிறோமோ அதையல்லாம் செய்தியாக புனைபெயரில் ஒளிந்து கொண்டு எழுத வேண்டியது அதை இந்த கேடு கெட்டவர்கள் தூக்கிகொண்டு பரப்பவேண்டியது கொஞ்சம்கூட சிந்திக்கும் அறிவே கிடையாதா? இவர்களால்லாம் மண்டல பொருப்பாளர்கள் என்றால் அந்த அமைப்பு எப்படி இருக்கும் என முடிவு செய்துகொள்ளவேண்டியதுதான்

சவுதி அரசாங்கம் இவர் இவர்கள்தான் உம்ரா செய்யனும் இவர் இவர்தான் ஹஜ் செய்யனும் இவரல்லாம் உம்ரா செய்யகூடாது என்று எப்பவாவது அறிவித்ததுண்டா? அப்படி அறிவிக்கும் அதிகாரம்தான் சவுதிக்கு உண்டா?

ஒருத்தர் ஒரு நாட்டுக்கு வந்தால் அவர் அந்த நாட்டுக்கு முறையான அனுமதி பெற்று வந்துள்ளாரா? அவர் இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளை எதுவும் கொண்டுவந்துள்ளாரா? என்றுதான் பார்ப்பர்களே தவிர கூமுட்டைகள் சொல்வது போல தனி தனி நபராக கூப்பிட்டி குலம் கோத்திரம் விசாரித்து கொண்டு இருக்கமாட்டார்கள்

ஹைதராபாத் விமானதில் பார்த்தேன் தமாமில் சுத்தினார் என்று ஒரு புரம்போக்கு அவுத்துவிட்டது அடுத்தநாளே வீடியோ ஆதரத்தோடு அது பொய் என நிறுபனம் ஆனது உடனே அடுத்து இந்த அரை வேக்காடு இதை கிளப்பிவிட்டுள்ளது

சொந்தகாசில் செருப்பு வாங்கி தன்னைதானே அடித்து கொள்வது என்பது இதுதானோ?
முத்துப்பேட்டை மைதீன் அவர்கள் அவரின் சகாவை போல இரண்டுநாள் லீவு போட்டுவிட்டல்லாம் ஓடிவிடாமல் அவர் சொன்னபடி ஆதரத்தை சமர்பிப்பார் என காத்திருக்கிறோம்

ஆதரம் வந்த பிறகுதான் இந்த கேடுகெட்ட அவதூறு மன்னர்கள் எந்த அளவுக்கு சேதாரம் ஆக போகிரார்கள் என்பது தெறியும்

குறிப்பு , பிஜெ அவர்கள் அடுத்தமாதம் அமெரிக்காவில் தவ்ஹித்ஜமாத் கிளை தொடக்கவிழாவில் கலந்து கொள்ள போக போவதாக செய்தியை சொல்லிவிட்டோம் சென்னைஏர்போட்டில் தினமும் டாய்லட்டில் ஒளிந்து இருந்து பார்க்கவும் அவதூறு பரப்ப எதாவது கிடைக்கலாம்
·

Thursday 21 February 2013

முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி!! முதுகில் குத்தும் காங்கிரஸ்


அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது குடும்பத்தினர்களுக்குக்கூட தெரியாத வகையில் அவரை தூக்கிலிட்டது அயோக்கிய காங்கிரஸ் அரசு.

இந்த சம்பவம் நடந்து முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே காங்கிரஸ் கயவர்களின் கயமைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகிக் கொண்டு வருகின்றது.

முஸ்லிம்களின் முதுகில் குத்தும் கயவர்கள் நாங்கள்தான். நாங்கள் சங்பரிவாரர்களைவிட முஸ்லிம்களை கறுவருப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு நாடகம்:

வீரப்பன் கூட்டாளிகள் 4பேருடைய கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்து விட்டதாகவும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும் சென்ற வாரம் செய்திகள் வெளியாயின.

சங்பரிவாரர்களை திருப்திப்படுத்த அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸ் கயவர்கள், தாங்கள் நடுநிலையானவர்கள்தான் என்று காட்டிக்கொள்வதற்காக சோனியா காந்தியால் திரைக்கதை வசனம் எழுதப்பட்டு, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ஷிண்டே ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம்தான், “வீரப்பன் கூட்டாளிகளுக்குத் தூக்கு” என்ற அடுத்தகட்ட நாடகமாகும்.

முஸ்லிம்களை இவர்கள் இழித்தவாயர்களாக நினைத்துக் கொண்டும், இவர்கள் ஆடக்கூடிய நாடகமும், போடக்கூடிய தெருக்கூத்தும் நமக்கு விளங்காது என்று கற்பனை செய்து கொண்டும் அரங்கேற்றிய இந்த சதித்திட்டத்தின் பின்னணி இதோ:

நாங்கள் நல்லவர்கள்; நடுநிலையானவர்கள் என்பது போலும் காட்டிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வீரப்பன் கூட்டாளிகள் 4பேருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றக் கூடாது. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குதண்டனை கொடுக்கப்போகின்றோம். அவர்களுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியை அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அறிவிப்புச் செய்ய வேண்டும். அவ்வாறு அறிவிப்புச் செய்து, தூக்குதண்டனைக்குரிய கால அவகாசத்தை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். நீதிமன்றம் அவர்களது தூக்குதண்டனைக்கு தடை விதிக்கும். காரணம் என்னவெனில் அவர்கள்தான் பல வருடங்கள் சிறைச்சாலையில் இருந்துள்ளார்களே! அதுவே அவர்களுக்கான மரணதண்டனையை ரத்து செய்ய போதுமான ஆதாரம் என்று நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்.

இப்படித்தான் தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பல நபர்களை இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தூக்கு நிறைவேற்றப்படாமல் இருந்துள்ளதை காரணம்காட்டி உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.

காங்கிரஸ் அயோக்கியர்களின் இந்த மாஸ்டர் பிளான் இப்போது வெற்றி பெற்றுவிட்டது.

இந்த 4பேருடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த செய்தியை மீடியாக்களில் அறிவிப்புச் செய்தார்கள்.

காங்கிரஸ் கயவர்கள் சொல்லிக் கொடுத்ததுபோல அவர்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.

நீதிமன்றமும் கருணை மனு பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வீரப்பன் கூட்டாளிகள் வைத்த வாதத்தை ஏற்று அவர்கள் 4பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குதண்டனையை நிறுத்தி வைத்து கடந்த 18.02.13 திங்கட்கிழமை அன்று தீர்ப்பளித்துவிட்டது. இதன் மூலம் காங்கிரஸ் அயோக்கியர்களின் மாஸ்டர் பிளான் வெற்றி பெற்றுள்ளது.

நாம் இந்த கயவர்களிடத்தில் கேட்கக்கூடிய கேள்வி,

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த செய்தியை ஏன் சம்பந்தப்பட்டவர்களிடமும், மீடியாக்களிடமும் சொன்னீர்கள்?


அப்சல் குருவுக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை யாரிடமாவது சொன்னீர்களா? குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்காவது தெரிவித்தீர்களா?


அபசல் குருவுக்கு அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டவுடனேயே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தீர்களா? குறைந்தபட்சம் அந்த ஒரு வாய்ப்பையாவது அப்பாவி அப்சல் குருவுக்கு வழங்கினீர்களா?


வீரப்பன் கூட்டாளிகளுக்கு மட்டும் தூக்குதண்டனையை ரத்து செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கிய மர்மம் என்ன?


நீண்ட நாட்கள் வீரப்பன் கூட்டாளிகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டதனால் அவர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை என்று சொல்வீர்களானால், அப்சல் குரு 8 ஆண்டுகள் மரணதண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தது மட்டும் சிறிய அளவு காலமா?

அப்படியானால் அப்சல் குருவுக்கு ஒரு நீதி, வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஒரு நீதியா?

முஸ்லிம்களுக்கு ஒரு நீதி; முஸ்லிமல்லாதவருக்கு ஒரு நீதியா?

முஸ்லிம்கள் கண்ணில் சுண்ணாம்பும், முஸ்லிமல்லாதவர்கள் கண்ணில் வெண்ணெய்யும் வைப்பீர்களா?

அப்சல் குரு பாராளுமன்றத்தை தாக்கினார் என்பது உண்மையென்று வைத்துக் கொண்டாலும் அது தேச குற்றச் செயல் என்றால், 22 காவலர்களை குண்டு வைத்து கொலை செய்த வீரப்பன் கூட்டாளிகள் செய்த செயல் மட்டும் என்ன தேசத் தியாகமா?

அப்படியென்றால் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்சல் குருவை தூக்கிலிட்டுவிட்டு, 22 காவலர்களை குண்டு வைத்துக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டப்படுமேயானால் இதுதான் இந்த தேசத்தில் முஸ்லிம்களை காங்கிரஸ் கையாளக்கூடிய, கவனிக்கக்கூடிய, கழுத்தறுக்கக்கூடிய விதம் என்பது அனைவருக்கும் விளங்கிவிட்டது; வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

முஸ்லிம்களை கழுத்தறுத்த காங்கிரஸ் கயவர்களுக்கு வரக்கூடிய தேர்தலில் தக்க பாடம் புகட்டப்பட வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு சவக்குழி வெட்ட வேண்டும்.

காங்கிரஸ் அயோக்கியர்கள் அப்சல் குருவை தூக்கிலிடவில்லை. அப்சல் குருவை தூக்கிலிட்டதன் மூலம் தனக்குத்தானே தூக்குக்கயிறை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை வரக்கூடிய தேர்தலில் அவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் முஸ்லிம்களின் பதிலடி இருக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்வு இதழ் வேண்டுகோள் விடுக்கின்றது.

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

தகவல் ஆன்லைன்பிஜெ.காம்


Monday 18 February 2013

டிவியில் வாழ்க்கையை தொலைத்த முஸ்லிம்பெண்களும் அதற்க்கு வழிகாட்டும் முத்துப்பேட்டைதர்ஹாவும்




அன்னிய ஆன்களிடம் முஸ்லிம்பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இஸ்லாம் நமக்கு தெளிவாக வழிகாட்டி இருந்தும் பெண்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பதற்க்கு முத்துப்பேட்டை தர்ஹாவில் நடந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துகாட்டு

செய்குதாவுத் அவுலியா என சொல்லப்படுகிரவரின் குடும்பதிருமனம் என விளம்பரம் செய்யப்பட்ட திருமனத்திற்க்கு நாதஸ்வரம் சீரியலில் நடித்த ஒரு நடிகரை [திருமுருகனாம்] அழைத்து வந்துள்ளார்கள் அவரை பார்த்த முஸ்லிம்பெண்கள் அவரோடு பேசவும் அவரை புகைபடம் எடுக்கவும் ஆர்வம்காட்டினார்கள்

இதைபர்த்து ஆனந்தம் அடைந்த அந்த நடிகரும் உற்ச்சாகமாக போஸ் கொடுத்தார் தன் குழந்தைகளை அவரிடம் கொடுத்தும் போஸ் கொடுக்க சொல்லி தங்கள் செல் போனில் படமெடுத்து மகிழ்ந்தனர்

இந்தமாதிரி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யதான் மகான் செய்குதாவுத் தர்ஹா உள்ளது என்பது மீண்டும் மீண்டும் நிறுபனமாகிரது அல்லாஹ் அனைவரையும் காப்பாற்ருவானாக

அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா - பாகம் 3உரை: பி. ஜைனுல் ஆபிதீன்



அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா - பாகம் 3 by abdulnaseerkw

அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா - பாகம் 2 மாபெரும் பொதுக்கூட்டம், மண்ணடி-சென்னை உரை: பி. ஜைனுல் ஆபிதீன்



அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை சரியா - பாகம் 2 by abdulnaseerkw

Thursday 14 February 2013

இஸ்லாமிய சட்டத்தால் உயிர்பிழைத்த இந்தியர்கள்


கள்ளச்சாரய விற்பனையில் ஏற்பட்ட தகராறில், பாகிஸ்தானியர், கொல்லப்பட்ட வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த, 17 பேர், மரண தண்டனைவிதித்து பின் கொள்ளப்பட்ட பாகிஸ்தானியரின் குடும்பத்தினரின் பேச்சுவார்த்தை மூலமாக 5கோடியை நஷ்டஈடாக கொடுத்து, தாயகம் திரும்பியுள்ளனர். (பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மரண தண்டனையை நீக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு).
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில், அல் அஜா தொழிற்பேட்டையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். அங்கு, 2009ம் ஆண்டு, ஜனவரியில், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக எழுந்த தகராறில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மிர்சா நாசிர்கான் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.இந்த கொலை தொடர்பாக, இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, 17 பேருக்கும், அங்குள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது குறித்து, மத்திய அரசின் உத்தரவின்படி, இந்திய தூதரகம் தலையிட்டு, தனியார் சட்ட ஆலோசனை மையத்தின் உதவியை நாடியது. கொலையானவரின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின், 5 கோடி ரூபாய் நஷ்டஈடு பெற்று விடுவிப்பதாக ஏற்றனர்.
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திர மானவனுக்காக (கொலை செய்த) சுதந்திர மானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது . (அல்குர்ஆன் 2-178)
இதை அடுத்து, அத்தொகை வழங்கப்பட்டதும், மரண தண்டனை இரண்டாண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே சிறையில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கை துவங்கியது.இந்நேரத்தில், சம்பவத்தின்போது, காயமடைந்தவர்கள், "எங்களுக்கு, 2.19 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்' என, நீதிமன்றத்தை அணுகினர்.மீண்டும், இந்திய தூதரகம் தலையிட்டு, 1.5 கோடி ரூபாய் வழங்க முடிவானது.

அவர்களுக்கான நிதியுதவி மற்றும் நீதிமன்ற செலவு ஆகியவற்றை, அங்குள்ள தொழிபதிபர் எஸ்.பி.,சிங் ஏற்றுக் கொண்டார். இதை அடுத்து, 17 இந்தியர்களும் சிறையில் இருந்து நேற்று முன்தினம்(11-2-2013), விடுவிக்கப்பட்டு, நேற்று அதிகாலை விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்றடைந்தனர்.

இந்த அடிப்படையில் சமிபத்தில் நடைபெற்ற இலங்கை பெண் மரண தண்டனையிலும் பொறுந்தும். சவுதியில் குழந்தையை இழந்தவர்கள் மன்னித்திருந்தால், அப்பெண் அவர் நாட்டிற்கு சென்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் மன்னிக்கவில்லை என்பதே உன்மை. இவர்கள் மன்னித்து நஷ்டஈடு பெற்றதால் உயிர்தப்பினர்.

நன்றி டிஎன்டிஜெ.காம். திருவாரூர்

Wednesday 13 February 2013

முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் வாயடைத்து போனது யார்? கமலா? டிஎன்டிஜெவா?உண்மையை திரித்து பேட்டியளித்த கருங்காலி யார்?


முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது கமலஹாசன் என்னையும் என் குடும்பத்தையும் இழிவுபடுத்தி மேடை போட்டு பேசலாமா என்று கேட்டதாகவும், சம்பந்தப்பட்ட அமைப்பு இதற்கு பதில் சொல்ல முடியாமல் வாய் மூடிக்கொண்டதாகவும் ஒரு வார இதழில் எழுதப்பட்டுள்ளதே? இதன் உண்மை நிலை என்ன?

அஹ்சன், நாகை

கமலஹாசன் இக்கேள்வியை நமது நிர்வாகிகளிடம் கேட்டது உண்மை. தவ்ஹீத் ஜமாஅத் வாயடைத்துப் போனது என்பது பச்சைப் பொய். இவ்வாறு கமலஹாசன் கேட்டதற்கு மாநிலச் செயலாளர் யூசுஃப் தக்க பதில் கொடுத்தார்.

கமலஹாசன் தரப்பு முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கி கலாச்சாரத் தீவிரவாதம் என்று சொன்னதையும், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று சித்தரித்ததையும், திரைத்துறையினரை ஏவிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக அறிக்கைவிட்டதையும் சுட்டிக்காட்டி நீங்கள் நடந்து கொண்டதற்கு பதிலடிதான் கொடுத்தோம். குர்ஆனை தீவிரவாதிகளின் கையேடு என்று காட்டுவது சரிதான் என்று தொடர்ந்து வாதிட்டீர்கள். இதெல்லாம்தான் இதற்குக் காரணம் என்று தெளிவாக விளக்கினார்.

நாங்கள் உங்களது கன்னத்தில் அடித்ததற்காக, நீங்கள் பதிலுக்கு எங்களது கன்னத்தில் அடித்தால் பரவாயில்லை; அதற்காக எங்களது கழுத்தை அறுக்கலாமா? என்று கமல் அருகிலிருந்த அவரது அண்ணன் சந்திரஹாசன் நமது நிர்வாகிகளிடம் கேட்க, அதற்கு நீங்கள் எங்களது கழுத்தை அறுத்தது; உங்களுக்கு கன்னத்தில் அறைந்ததுபோலத் தெரிகின்றதா? என்று கேள்வியெழுப்ப கமலும் அவரது அண்ணன் சந்திரஹாசனும் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போயுள்ளனர். இதுதான் நடந்த உண்மை.

இந்தப் பேச்சு வார்த்தையின்போது மேற்படி இதழின் ஆசிரியர் அங்கே இருக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் 23 அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர்தான் அந்த இதழுக்கு இந்த உண்மையான தகவலுடன் பொய்யையும் கலந்து சொல்லியிருக்க முடியும். அந்த இதழுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் ஆகாது என்பது உலகத்துக்கே தெரியும். அப்படியானால் இல்லாதவைகளைக் கலந்து அந்த இதழுக்கு பொய்ச் செய்தி அளித்த கருங்காலி 23அமைப்பில் ஒருவராகத்தான் இருக்க முடியும். இப்படி பொய்யான தகவலைக் கொடுத்தது 23 இயக்கத்திலிருந்த ஒரு கருங்காலிதான் என்பதை 23 இயக்கத்தினரும் அறிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அந்த கருங்காலி யார் என்பதை அந்த இதழில் வெளியான செய்தியிலிருந்தே யூகித்து அறிந்து கொள்ளலாம். 23 இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க, ஒருவர் மட்டும் நீக்க வேண்டிய காட்சிகளை கமல்ஹாசனிடம் சொன்னதாக அந்த இதழ் புகழ்ந்து எழுதியுள்ளதே அவர் தான் அந்தக் கருங்காலி என்பதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.

முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு முன்னாள் 23 அமைப்புகளும் கமலஹாசன் வீட்டில் திரைப்படத்தைப் பார்த்தபோது, எல்லா இயக்கத்தினரும் கோபமாக வெளியே வந்தபின்னர், அந்த கருங்காலி மட்டும் மானம்கெட்டுப்போய் கமல்ஹாசனோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததாக சில தலைவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

மேலும் முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது கமலஹாசனை இந்தக் கருங்காலி எப்படியெல்லாம் ஐஸ் வைத்தார் என்பதை அறிந்தால் அது சமுதாயத்திற்கே அவமானமாகும். அதையெல்லாம் வெளியே சொன்னால் நாற்றமெடுத்துவிடும்.

அனைத்து தலைவர்களும் இப்படத்தில் நீக்கப்படவேண்டிய காட்சிகளை விளக்கினார்கள். ஆனால் ஜால்ரா தட்டிக்கொண்டிருந்த இவர் மட்டும் அந்த சபையில் வாதம் செய்ததாக அந்த இதழில் எழுதப்பட்டிருப்பதில் இருந்தே மேற்படியார்தான் இந்தப் பொய்க்குச் சொந்தக்காரர் என்பதை கூட்டமைப்பினர் புரிந்து கொண்டனர்.

கமலஹாசனின் அடுத்த படத்தின் வினியோக உரிமையைப் பெறுவதற்காக இந்தக் கருங்காலி கூழைக்கும்பிடு போட்டார் என்றோ, கமலஹாசனைப் பயன்படுத்தி திரைப்படத்தில் ஏதேனும் வாய்ப்பைப் பெறுவதற்காகவோ இப்படி அடிமைக்கும் கீழாக இறங்கி வந்து இருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம்.

கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதிகளில் இவர் இடம் பெற்றால் இனிமேல் எந்த ஒத்துழைப்பும் நாம் அளிக்கப்போவதில்லை என்பதை இதன் மூலம் கூட்டமைப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

துரோகம் செய்பவர்கள் விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொள்ளாவிட்டால் கூட்டமைப்புக்குத்தான் பாதிப்பு என்பதை சொல்லி வைக்கிறோம்.


13.02.2013. 01:05



Sunday 10 February 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மருத்துவ உதவி



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.02.2013 அன்று பக்கீர்வாடியை சேர்ந்த சகோதரி ஒருவருக்கு ஆப்ரேசன் செய்வதற்க்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4000 [நான்காயிரம்] வழங்கப்பட்டது

மேலும் அந்த சகோதரிக்கு மருத்துவ உதவி செய்ய விரும்புவர்கள் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும்

Saturday 9 February 2013

திருவாரூர்மாவட்டம் தன்னீர்குன்னத்தில் தடையைமீறி நபிவழிபடி ஜனாசா நல்லடக்கம்

திருவாரூர் மாவட்டம், தண்ணீர்குன்னம் கிளையில் நமது சகோதரர் ஒருவர் இறந்துவிட்டார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.)

நேன்று 8-2-2013 மாலை 4.30 மணியளவில் ஜனாஷா தொழுகை மற்றும் அடக்கத்திற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டது. நபிவழி அடிப்படையில் நடக்க இருக்கும் ஜனாஷா அடக்கத்திற்கு ஊரில் கடுமையான எதிர்பு தெரிவித்த நிலையில்..

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நபிவழி அடிப்படையில் இந்த ஜனாஷா தொழுகை மற்றும் அடக்கத்தில் பல கிளை சகோதரர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் கொள்கை சகோதரர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்டத்தின் சார்பில் அறிவுருத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பல சகோதரர்கள் இந்த தொழுகை மற்றும் அடக்கத்தில் கலந்துகொண்டனர்

தனது மகளை கற்பழித்து கொலை செய்த சவுதி மதபோதகருக்கு 4 மாத சிறை தண்டனையா? மறைக்கப்பட்ட உண்மைகள்!




Kolaikku 4 Matha Sirai thandanai Sariya by abdulnaseerkw

ஹிந்து பையனுக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் திருமனம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமுமுக [மமக] பொது செயலாளர் அப்துல் சமது .

.தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பஜகதலைவர் இலகனேசனின்கையை பிடித்து தூக்கிகொண்டு போஸ் கொடுத்தார் இதை மக்கள் விமர்சித்ததும் அவர்தான் என்கையை பிடித்தார் என போட்டோவில் இருப்பதற்க்கு மாற்றமாக கூறி அசடுவழிந்தார்

இப்போது அந்த கட்சியின் [மமக] பொதுசெயளாளர் அப்துல்சமது அவர்கள் ஒரு முஸ்லிம்பெண்னுக்கு ஒரு இந்து பையனை கல்யானம் செய்யும் கேடுகெட்ட நிகழ்ச்சியில் நின்று கொண்டு போஸ் கொடுக்கிறார் இப்போது மக்கள் வருத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இவர் என்ன சொல்லி அசடுவழிகிறார் பார்ப்போம்

ஓட்டுக்காக இஸ்லாத்தை கேவலப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போஸ்கொடுக்கும் இஸ்லாமிய பொர்வைபோத்திய அரசியல் வியாதிகளே கீழே உள்ள குரான் வசனத்தை ஒருதடவை படித்து பாருங்கள் அல்லாஹ் உங்களை காப்பாற்ருவானாக

قال تعالى
وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ } (221) سورة البقرة
இணைவெக்கும் பெண்கள் அவர்கள் விசுவாசம் கொண்டாலே தவிற அவர்களை மணக்க வெண்டாம்.
ஓரு விசுவாசி விசுவாசியான பெண்னையே திருமணம் செய்யவேண்டுமென இஸ்லாம் வழியுருத்துகிறது
மாமறை – 2:221

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பென்கள்பயான்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.02.2013 வெள்ளிகிழமை மாலை 4.30 மனியளவில் அகாஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாபுசேன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் களந்துகொண்டு பயனடைந்தர்கள் அல்ஹம்துலில்லாஹ்

Friday 8 February 2013

மார்ச் 1 முதல் டிஎண்டிஜெ வெப்டிவி ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத்தின் வெப் டிவி இன்ஸா அல்லாஹ் மார்ச் 1 முதல் ஆரம்பமாக உள்ளது

Wednesday 6 February 2013

முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான தர்பியா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.02.2013 காலை 10 மனிமுதல் 12 மனிவரை மானவ மானவியர்களுக்கான தர்பியா மஸ்ஜித் நூரில் நடைபெற்றது ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டுபயனடைந்தார்கள் அதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரான் [கட்டிநாநா] அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்

கூகுல்குரோம் உபயோகப்படுத்துபவர்கள் நேரத்தைமிச்சப்படுத்த எளியமுறைகள்




Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts
Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் நாம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.

Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய
Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4 தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய.
Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home Home Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய
F1 Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய
Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R Refresh செய்ய
Esc Loading – ஐ நிறுத்த
Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar பக்கத்தை Scroll down செய்ய
Home பக்கத்தின் Top க்கு செல்ல
End பக்கத்தின் Bottom க்கு செல்ல


Tuesday 5 February 2013

"TNTJ நடத்தும் மாநில அளவிலான மாணவரணிக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம்


"
இன்ஷா அல்லாஹ், TNTJ மாணவரணி சகோதரர்களுக்கான மாநில அளவிலான முதல் தர்பியா முகாம் சென்னை டி.நகரில் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாநிலத்தலைவர் பி.ஜைனுல் ஆபிதின் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும், மாநில மாணவரணி நிர்வாகிகளும் கிளை, மாவட்ட மாணவரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்
ஏகத்துவ கொள்கையை கொண்ட போர் வீரர்களே படை எடுப்போம் தலைநகர் நோக்கி!!

Sunday 3 February 2013

இன்று சன் தொலைகாட்சியில் விவாத மேடை நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் vs ப.ஜ.க. விவாதம் (வீடியோ பாகம் -1).




Vivatha Medai (TNTJ vs BJP) Part 1 by abdulnaseerkw

பாட்டனாரின் சமாதியை காட்டி தர்ஹா என ஏமாற்றியது அம்பலம்

ஆட்டைகடித்து மாட்டைகடித்து கடைசியில் மனிதனை கடித்தது என்று பழமொழி சொல்வார்கள் அதுபோல முத்துப்பேட்டை தர்ஹா மஹான் ஷெய்ஹுதாவுது ஒளியுள்ளா அடங்கியுள்ள இடம் அவர்மிக பெறிய வளியுள்ளா என மக்களை ஏமாற்றி வந்தவர்கள் இன்று அவர்கள் வீட்டு கல்யானத்திற்க்கு பத்திரிக்கையடித்துள்ளார்கள் செய்குதாவுத் ஒளியுள்ளாஹ் அவர்கள் பாட்டனாம்.
தர்ஹாவாதிகளே சிந்தியுங்கள் அவர்கள் பாட்டனாரின் அடக்கஸ்தலத்தை காட்டிதான் இத்தனைகாலம் உங்களை ஏமாற்றியுள்ளார்கள்

Friday 1 February 2013

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தவ்ஹித் நூலகம் திறப்பு






தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தவ்ஹித் நூலகம் இன்று 01.02.2013 வெள்ளிகிழமை அசர்தொழுகைக்கு பிறகு ஆரம்பித்துவைக்கப்பட்டது

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக ஆலோசனைகூட்டம்

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.02.2013 வெள்ளிகிழமை தாவாவை இன்னும் வீரியப்படுத்துவது சம்மந்தமாக கிளை மசூரா நடைபெற்றது

இதில் தெருமுனை பிரச்சாரத்தில் புரஜக்டரை பயன்படுத்தி புரஜக்டர் தாவா செய்வது

டிவி சேனல் சொந்தமாக ஆரம்பித்து லக்கிகேபில் மூலமாக தாவாபனி செய்வது என முடிவு செய்யப்பட்டது

புதிய தலைமுறை தொலைகாட்சியில் நாளை இரவு 8 மணிக்கு[இந்தியநேரம்] “அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பிஜெ அவர்கள் பதிலலிக்கிறார்கள்” காணதவறாதிர்கள்.




அக்னி பரீட்சை - விஸ்வரூபம் தொடர்பான... by f100003621523876

இன்ஷா அல்லாஹ், நாளை (02.02.2013) இரவு 8 மணிக்கு [இந்திய நேரம்] புதிய தலைமுறை டிவியில், "அக்னி பரீட்சை" என்ற நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கும் விஸ்வரூபம் படம் தொடர்பான நிகழ்ச்சி காணத்தவறாதீர்கள்.