Wednesday 27 August 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் !! நமது பங்களிப்பு என்ன?

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தில் நம் ஒருஒருவருடைய பங்கும் அவசியம் இருக்கவேண்டும்
இந்த தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் மீடியாமூலம் அனைத்துதரப்பு மக்களிடமும் கொண்டுசெல்லபடவேண்டும்
இதன் முதல் படியாக இந்த செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட திஹிந்து நாளிதல் கமெண்ட்பகுதியில் ஒருஒருவரும் மென்மையாக தங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் இதோ அதன் லிங்க்

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6349335.ece

Monday 25 August 2014

முத்துப்பேட்டை குடிநீர் வினியோகம் குளருபடி களத்தில் தவ்ஹித்ஜமாத்


முத்துப்பேட்டையில் குடிதண்ணீர்  தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகமாகிவருவதால் மக்கள் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள் இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பேரூராட்சி மெத்தனமாக இருப்பதால் இது சம்மந்தமாக பொதுமக்கள் தவ்ஹித்ஜமாத்திடம் முறையிட்டார்கள்
 முதல் கட்டமாக இதை சரிசெய்ய மனுகொடுத்து நேரில் வழியுறுத்துவது அதன் பிறகும் சரிசெய்யாவிட்டால் மாவட்ட மாநில தலைமையுடம் ஆலோசனை செய்து அடுத்தகட்ட வேலையை செய்வது என தவ்ஹித்ஜமாத் நிர்வாக குழுவில் முடிவு செய்யப்பட்டது
இதை தொடர்ந்து இன்று கிளை துனைதலைவர் முகம்மது மீரான் [கட்டிநாநா] தலைமையில் பேருராட்சிக்கு சென்று எழுத்துபூர்வமாக கோரிக்கை மனு கொடுத்து நேரிலும் நிலையை விளக்கி சொல்லப்பட்டது
உரிய நடவடிக்கை எடுப்பதாக குடிநீர் வினியோக பொருப்பாளர் உறுதி அளித்துள்ளார் பொருத்திருந்து பார்ப்போம்.

மஸ்ஜித்நூரில் தினமும் நடைபெரும் திருக்குரான் விளக்க வகுப்பு

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித்நூரில் 25.08.2014 காலை சுபுஹுதொழுகைக்கு பிறகு நடைபெற்ற திருகுரான் தர்ஜிமா வகுப்பு

Sunday 24 August 2014

முத்துப்பேட்டையும் குடிதன்னீர் பிரச்சனையும்

முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக குடிதண்ணீர் சரியானமுறையில் வினியோகம் இல்லை. மழை கடந்தவருடம் குறைவாக பெய்ததால் போர்களில் தண்ணீர் சப்ளையும் பல் இடங்களில் இல்லை. போர்கால அடிப்படையில் இதை சரிசெய்ய வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒன்றையும் செய்வதில்லை 

ஆனால் முத்துப்பேட்டை டவுனில் வசிக்கும் மக்களுக்கு (முஸ்லிம்கள்) வரிமட்டும் கிரேடு அதாவது மற்றவர்களைவிட பலமடங்கு அதிகம் இந்த குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகானும்படி மக்கள் தவ்ஹித்ஜமாத்திடம் முறையிடுகிறார்கள் இது சம்மந்தமாக முடிவு எடுக்க கூடிய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது விரைவில் தவ்ஹித்ஜமாத் களத்தில் இறங்க வாய்ப்பு உள்ளது 

ஏற்கனவே தவ்ஹித்ஜமாத்தின் புகார் காரணமாக மாவட்ட ஆட்சியர் நேரடி உத்திரவு போடும் நிலை ஏற்பட்டது இப்போது என்ன நடக்கிறது என்று பொருத்து இருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்

தினம் ஒரு ஹதீஸ் மஸ்ஜித் நூர்

திருவாரூர் மாவட்டம் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.08.2014 மகரிபு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்நூரில் நடைபெற்ற தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி

வாராந்திர பெண்கள் பயான் குண்டாங்குளத்தெரு ஜாகிர் இல்லத்தில் நடைபெற்றது



திருவாரூர் மாவட்டம் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.08.2014 அன்று குண்டான்குளம் தெரு சகோதரர் ஜாகிர் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்ரனர் அல்ஹம்துலில்லாஹ்

திருச்சியில் நடந்த தவ்ஹித்ஜமாத்தின் மாநில செயற்குழு



Wednesday 20 August 2014

கண்திர்ஸ்டி பானை அகற்றப்பட்டது..!!!





திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 க்குட்பட்ட பளாவை என்ற கிராமத்தில்(28/07/2014) அன்று  கண்திர்ஸ்டிக்காக வீட்டு முன்பு பானை ஒன்று மாட்டி விடப்பட்டிருத்தது இதுமார்க்கத்தில் தடை என்பதை விளக்கப்பட்டு பானை அகற்றப்பட்டது.   
அல்ஹம்துலில்லாஹ்..

Monday 18 August 2014

பெண்கள் பயான்

வாராந்திர பெண்கள் பயான் கிட்டங்கி தெருவில் உள்ள சகோதரர் ரியாத் ஏ ஆர் பரக்கத்தலி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது



”பட்டுக்கோட்டை காவல்நிலையம் முற்றுகை” பிரச்சாரம்..!!

காட்டுமிராண்டிதனமாக அப்பாவியை தாக்கிய காவலர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும் உடனடியாக அந்த போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் 19.08.2014 செவ்வாய் கிழமை பட்டுக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுமையிடும் போராட்டத்தை தவ்ஹித்ஜமாத் அறிவித்துள்ளது

இதற்க்கான ஆயத்த பனிகளை செய்வதற்க்காக முத்துப்பேட்டை கிளை 1 முத்துப்பேட்டை கிளை 2 ஆகியவற்றின் ஒருங்கினைந்த கூட்டம் 17.08.2014 ஞாயிறு பகல் 1 மனியளவில் மஸ்ஜித் நூரில் நடைபெற்றது

அதில் அதிக அளவில் மக்களிடம் இந்த செய்தியை கொண்டுபோய் சேர்த்து மிக அதிக அளவில் மக்களை திரட்டி போராட்டத்தை மிக பெரிய அளவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது

இதை தொடர்ந்து அசர் தொழுகைக்கு பின்பு 4 மனியளவில்  நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என சுமார் 30 பேர்கொண்ட குழு வீடு வீடாக சென்று மக்களிடம் விளக்கி சொல்லி பிரசுரமும் வினியோகித்தார்கள்

இது முத்துப்பேட்டை மக்களிடம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த போக்குவரத்து காவலர் ஏதோ அரசியல் பின்பலத்தில் இப்படி செய்கிறாரோ என தோன்றுகிரது அவர் பல பேரிடம் இப்படி நடந்துள்ளார் அவரை எதிர்த்து போராட நீங்கள்தான் சரியான ஆள் நல்லபடியாக நடத்துங்கள் நாங்களும் குடும்பத்தோடு கலந்துகொள்கிறோம் என மக்கள் உற்ச்சாகமாக வரவேற்றனர்

நம்மை எதிர்ப்பவர்கள் நாம் பெரும் கூட்டமாக வருவதை பார்த்து ஓடி மறைந்தாலும் நாம் அவர்களையும் தேடி போய் விபரம் சொன்னதும் நிச்சயம் கலந்துகொள்வதாக வாக்குகொடுத்தனர்

 இனிமேல் அநியாயமாக சட்டத்தை மீறி எந்த அதிகாரியும் நடக்காமல் இருக்க இந்த போராட்டம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்





Sunday 17 August 2014

உள் அரங்கக் கூட்டம்

சூனியம் செய்வதாக ஒப்பந்தம் போட்ட அகோரி மனிகண்டன் வசிப்பிடமான திருச்சியில் சூனியம் என்பது பொய் என்பதை நிறுபிக்கும் மாபெரும் நிகழ்ச்சி


Tuesday 12 August 2014

சமுதாய செய்திகள் பெண்கள் பயான்

திருவாரூர் மாவட்டம் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை  கிளை 1 சார்பாக 08.08.2014  வெள்ளிக்கிழமை அன்று அசருக்கு பிறகு  SPKM தோட்டவளாகத்தில்உள்ளசகோதரர்வக்கீல் அவர்கள்  இல்லத்தில்பெண்கள் பயான் நடைபெற்றது இதில் கோவையைச் சேர்ந்த மவ்லாவி அல்தாப் ஹுசைன் அவர்கள்உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள்கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..... 








Sunday 10 August 2014

வாராந்திர நிர்வாக மசூரா நடை பெற்றது.



 



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக
08/08/2014 வெள்ளிக்கிழமை பஜிர்தொலுகைக்குப் பிறகு
வாராந்திர நிர்வாக மசூரா நடை பெற்றது.  
அல்ஹம்துலில்லாஹ்....

மருத்துவ உதவி வழங்கப்பட்டது







திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக
 08/08/2014வெள்ளிக்கிழமை அன்று எசோதா மருத்து
வமனை தெருவைச் சேர்த்த ரூபிகாலணியில் வசிக்கும்
சர்புதீன் மனைவி  தௌலத் என்ற பெண்மணிக்கு இருதய
அறுவைசிகிச் சைக்காக ஜுமாஆ வசூல்மூலம் எட்டாயிரம்
ரூபாய் மருத்துவ வுதவி வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்....

Saturday 9 August 2014

பித்ரா விநியோகம் செய்யப்பட்ட விபரம் ......















திருவாரூர்மாவட்டம்,முத்துப்பேட்டைகிளை1)சார்பாக
நோன்புப் பெருநாள் தர்மம்(ஃபித்ரா)உணவுப்போருள்கள்
பாக்கெட்செய்து  முத்துப்பேட்டைமற்றும் சித்தமல்லி &
பாளாவை கிராமங்களில் விநியோகிகப்பட்டது,    பித்ரா
விபரம். ஒரு  நபருடய  பித்ரா தொகை (100)ரூபாய்
ஊர்வசூல் (1,29279)ரூ தலைமை  மூலம்  வந்த  தொகை
(20,000) ரூபாய்   மொத்த  தொகை(149279)ரூ பாய்  வசூல்
செயப்பட்டது   அதை  (400)  குடும்பங்களுக்கு 180ரூபாய்க்கு மதிப்புள்ள  பொருட்களும் 100ரூபாய் பணமும் சேர்த்து
விநியோகிக்கப் பட்டது மேலும் (123) குடும்பங்களுக்கு (300)
ரூபாய் பணமாக கொடுக்கப்பட்டது மொத்தம்(523)
குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.  
 அல்ஹம்துலில்லாஹ்....