Wednesday 8 October 2014

ஆநே பள்ளிகூடம் அருகே அநீதிக்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்

நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் எப்போதுமே தவ்ஹித்ஜமாத் முன்னிலை வகிக்கும் 
ஜாக் பெருநாளை முன்னிட்டு சனிக்கிழமை 04.10.2014 அன்று முரீது பைஜி குரூப் ஒரு மாபெரும் இஸ்லாமிய!! இசை நிகழ்ச்சி நடத்தியது 
இதை சிலர் ஆதரித்தாலும் பலர் இதை கண்டிக்காமல் நமக்கேன் வம்பு என் ஒதுங்கிகொண்டனர்
தவறை சுட்டி காட்டுவதில் யாருக்கும் வளைந்து கொடுக்காத தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அதே இடத்தில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்தது.
இது தாயி ராஜித்தின் அவர்கள் இசை எந்த அளவுக்கு இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதரத்தோடு சுட்டிக்காட்டி நேற்று நடந்த அந்த இசை நிகழ்ச்சியை கடுமையாக கண்டித்தார்கள்
இன்று அரபாநோன்பு இப்தார் ஏற்பாடு நாளை காலை திடலில் பெருநாள் தொழுகை ஏற்பாடு குர்பானி ஆயத்த வேலைகள் இவ்வளவு வேலை பளுவுக்கு மத்தியிலும் இந்த அவசியமான பனியை செய்த தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் நன்மையை கொடுக்க துவா செய்வோம்