Monday 18 August 2014

”பட்டுக்கோட்டை காவல்நிலையம் முற்றுகை” பிரச்சாரம்..!!

காட்டுமிராண்டிதனமாக அப்பாவியை தாக்கிய காவலர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும் உடனடியாக அந்த போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் 19.08.2014 செவ்வாய் கிழமை பட்டுக்கோட்டை காவல் நிலையத்தை முற்றுமையிடும் போராட்டத்தை தவ்ஹித்ஜமாத் அறிவித்துள்ளது

இதற்க்கான ஆயத்த பனிகளை செய்வதற்க்காக முத்துப்பேட்டை கிளை 1 முத்துப்பேட்டை கிளை 2 ஆகியவற்றின் ஒருங்கினைந்த கூட்டம் 17.08.2014 ஞாயிறு பகல் 1 மனியளவில் மஸ்ஜித் நூரில் நடைபெற்றது

அதில் அதிக அளவில் மக்களிடம் இந்த செய்தியை கொண்டுபோய் சேர்த்து மிக அதிக அளவில் மக்களை திரட்டி போராட்டத்தை மிக பெரிய அளவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது

இதை தொடர்ந்து அசர் தொழுகைக்கு பின்பு 4 மனியளவில்  நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என சுமார் 30 பேர்கொண்ட குழு வீடு வீடாக சென்று மக்களிடம் விளக்கி சொல்லி பிரசுரமும் வினியோகித்தார்கள்

இது முத்துப்பேட்டை மக்களிடம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த போக்குவரத்து காவலர் ஏதோ அரசியல் பின்பலத்தில் இப்படி செய்கிறாரோ என தோன்றுகிரது அவர் பல பேரிடம் இப்படி நடந்துள்ளார் அவரை எதிர்த்து போராட நீங்கள்தான் சரியான ஆள் நல்லபடியாக நடத்துங்கள் நாங்களும் குடும்பத்தோடு கலந்துகொள்கிறோம் என மக்கள் உற்ச்சாகமாக வரவேற்றனர்

நம்மை எதிர்ப்பவர்கள் நாம் பெரும் கூட்டமாக வருவதை பார்த்து ஓடி மறைந்தாலும் நாம் அவர்களையும் தேடி போய் விபரம் சொன்னதும் நிச்சயம் கலந்துகொள்வதாக வாக்குகொடுத்தனர்

 இனிமேல் அநியாயமாக சட்டத்தை மீறி எந்த அதிகாரியும் நடக்காமல் இருக்க இந்த போராட்டம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்