Tuesday 28 January 2014

தமிழகத்தை புரட்டிபோட்ட ஜனவரி 28 போராட்டம் ஒரு பார்வை





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழகமே என்று சொல்வதைவிட ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த ஒரு போராட்டம் இந்த சிறை நிறப்பும் போராட்டம் என்றால் அது மிகையல்ல

லட்சக்கனக்கில் மக்கள் கூடிய இந்த கூட்டத்தில் எந்த தலைவருக்கும் புகழாரம் கிடையாது எந்த அரசியல் கட்சிக்கும் ஜால்ரா கிடையாது எதற்க்காக மக்களை அழைத்தோமோ எதற்க்காக மக்கள் நம்மை நம்பி வந்தார்களோ அதை மட்டுமே பிரதானமாக கொண்டு நடைபெற்ற கூட்டம்

இட ஒதுக்கீடு கொடுத்தால் சிந்தாமல் சிதராமல் ஒட்டு மொத்தமாக ஓட்டுகளை அந்த கட்சிக்கு போடவும் தெறியும்!! அப்படி கொடுக்காமல் ஏமாற்றினால் அந்த கட்சிக்கு ஒரு ஓட்டுகூட போடவிடாமல் துடைத்து எறியவும் தெறியும் - - - சென்னையில் பிஜெ

அடங்கி போய் அடங்கிபோய் உரிமைகளை இழந்த சமுதாயத்திற்க்கு இப்போது எப்படி அடக்குவது அநியாயத்திற்க்கு எதிராக எப்படி ஆர்பரித்து எழுவது அநியாயத்தை எப்படி காலில்போட்டு மிதிப்பது என்பது நன்றாக தெரியும் இனியும் ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவது நீங்கள்தான் என்பதை நாட்டுக்கு சொல்ல கூடியதுதான் இந்த கூட்டம் ஜாக்கிரதை--------திருச்சியில் அல்தாபி

லட்சோபலட்சம் மக்கள்கூடி உரிமைக்காகா ஆர்பரிக்கும் இந்த கூட்டம் முடிவு அல்ல இதுதான் ஆரம்பம் இட ஒதுக்கீடு கொடுத்தால் ஓட்டு இல்லாவிட்டால் அடுத்து சட்டசபையை முற்றுகை இடுவோம் பாராளுமன்றத்தை முற்றுகைஇடுவோம் ரானுவமே தடுத்தாலும் பயப்பட மாட்டோம்-----கோவையில் ரஹ்மத்துல்லா

ஆளும்கட்சியாக அதிகாரத்தில் உள்ளவர்கள் போட வேண்டியது அரசு ஆனைதானே அல்லாமல் அனையம் அல்ல இட ஒதுக்கீடு அல்லாமல் வேறு எது செய்தும் எங்கள் சமுதாய ஓட்டை வாங்க இயலாது என்பதை அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்க திரண்டுவந்ததுதான் இந்த லட்சகனக்கான மக்கள் கூட்டம்------ நெல்லையில் சம்சுலுஹா

இன்னும் தமிழகம் அல்லாமல் காரைக்கால்,பாண்டிச்சேரி,பம்பாய் போன்ற இடங்களிலும்  முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையை வென்றெடுக்க மக்கள் திரண்டுவந்தனர்

இனியும் காலம் தாழ்த்தாமல் எந்த கட்சி இட ஒதுக்கீடு கொடுத்து எந்த சிலவும் இல்லாமல் ஒட்டு மொத்த சமுதாய ஓட்டுகளையும் அள்ளிசொல்ல போகிரது என பார்ப்போம்