Wednesday 5 November 2014

குளம் குட்டைகளை சரிசெய்து நீர் ஆதாரத்தை பெருக்காவிட்டால் மிகபெரிய போராட்டம் பேரூராட்சியை வற்புறுத்துவது என தவ்ஹித்ஜமாத் தீர்மானம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 ஆலோசனைகூட்டம் 05.11.2014 காலை மஸ்ஜித்நூரில் கிளைதலைவர் சகோதரர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இதில் முத்துப்பேட்டையின் அடிப்படை பிரச்சனையான நீர் ஆதாரத்தை பெருக்குவது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது

முத்துப்பேட்டைக்கு நீர்நிலை ஆதாரமான குளம் குட்டைகளை தூர்வாருவது 

அந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதைகளை சரிசெய்வது

ஆற்று தண்ணீரை கொண்டு குளங்களை நிறப்புவது 

குளங்களை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துவதை தடுத்து மாற்று ஏற்பாடு செய்வது

போன்ற கோரிக்கைகளை செய்ய பேரூராட்சியை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது சி கிரேடைவிட மோசமான சுகாதாரத்தில் வாழும் முத்துப்பேட்டை மக்கள் கிரேடு வரிசெழுத்துகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அமசம்

தவ்ஹித்ஜமாத் கடந்த ஆகஸ்ட் மாதம் குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள குளருபடிகளை சரிசெய்ய வலியுறுத்து ஒரு சில ஆலோசனைகளை கூறி கோரிக்கை வைத்தது அது உடனே சரிசெய்யப்பட்டது 

அதே போல இதையும் சரிசெய்யாவிட்டால் மாநில தலைமையின் ஆலோசனையின் படி மிகபெரிய போராட்டத்தை தவ்ஹித்ஜமாத் நடத்தும் இன்ஷா அல்லாஹ்

குடிதண்ணீர் குளருபடியை சரிசெய்ய மனுகொடுக்க சென்ற போது