Thursday 4 April 2013

வீரியமாக நடந்துவரும் கிராமப்புர மாற்றுமத தாவா



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக 04.04.2013 வியாழக்கிழமை தாவாபனியின் ஒரு பகுதியான பிறமத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வதற்க்காக முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள கிரமமான பாலவாய் கிராமத்திர்க்கு தாயி மிசால் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் உள்பட ஒரு குழு சென்றது

அங்குள்ள முஸ்லிம்களுக்கு நாம் போன வாரம் தாவா செய்து இருந்ததின் பலன் இன்று தெறிந்தது அவர்கள் நமக்கு நல்ல வரவேர்பு கொடுத்து பிறமத மக்கள் வாழும் பகுதிக்கு அழைத்தும் சென்றனர்
அங்குள்ள சுன்னத்ஜமாத் பள்ளிவாசலில் உனர்வின் விளம்பர போஸ்டரும் நாளை துளசியாபட்டினத்தில் அல்தாபி பேசும் போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது அவர்களின் மாற்றத்தைகாட்டியது

நாம் பிறமத சகோதரர்களுக்கு பிரசுரம் வினியோகம் செய்யும்போது அங்கு பைக்கில்வந்த ஒரு சகோதரர் அந்த பிரசுரத்தை வாங்கி படித்து விட்டு இஸ்லாம் சம்மந்தமாக சில சந்தேகங்களையும் கேட்டார் அவருக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் அதில் திருப்தியடைந்த அவர் நம்மை இன்னும் சிலரிடம் அழைத்து சென்று நம் தாவாவுக்கு உதவினார்

பிறமத சகோதரிகளை அவர்கள் வீடுகளுக்கு தேடி சென்று மாமனிதர் நபிகள் நாயகம் புக்கும் யார் இவர் பிரசுரமும் வழங்கப்பட்டது இதை பார்த்து மகிழ்ச்சியடந்த சகோதரிகள் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றதோடு அடிக்கடி இங்கு வந்து நல்ல கருத்துகளை கூறுமாறு வேண்டுகோளும்விடுத்தனர்

சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவருக்கும் தாவா செய்யப்பட்டது அப்படி செய்யும்போது இரு இளைஞர்கள் பிரசுரத்தை படித்துவிட்டு நம்மை ஒரு கடைக்கு அழைத்து சென்று தாவாசெய்யுமாறு கூறினார்கள் உடனே அந்த கடையில் இருந்தவர்களுக்கு புக்கும் பிரசுரமும் கொடுத்து தாவாசெய்யப்பட்டது அதில் பெரும் மகிழ்ச்ச்சியடந்த அவர்கள் கொஞ்சம்பிரசுரத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள் நாங்கள் மக்களுக்கு கொடுக்கிறோம் என கேட்டுவாங்கிகொண்டனர் அதோடு மட்டுமல்லாமல் நம் போன்நம்பரை வாங்கிகொண்டு இஸ்லாம்சம்மந்தமாக எழும் சந்தேகக்களை அவ்வப்போது கேட்டு தெளிபெற்றுகொள்வதாகவும் கூறினார்கள்

இன்றையதாவாவில் 10 நபர்களுக்கு மாமனிதர் புக்களும் 50 பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்