Thursday 6 December 2012

இரண்டு குதிரையில் ஒரே நேரத்தில் சவாரி,ஓட்டுக்காக வேசம் கட்டும் வேடதாரிகள்



ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி ,தர்மபுரி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் நடத்திய கூட்டத்தில் பொது செயளாளரும் அதற்க்கு நேர் எதிராக ராமதாஸ் நடத்திய கூட்டத்தில் துனை தலைவரும் கலந்து கொண்டு தமுமுகவும்,எஸ்டிபிஐ யும் கின்னஸ் சாதனை படைத்துள்ளாகள், இந்த சாதனையை ஏற்கனவே முஸ்லிம் சமுதாயத்திடம் செய்துகாட்டியுள்ளார்கள் தர்ஹாவாதியிடமும்,ஏகத்துவவாதியிடமும் ஒரே நேரத்தில் நாங்கள் உங்கள் பக்கம்தான் என ஓட்டுக்காக கொள்கையை விட்டு வேசம் போட்டதை பார்த்து இப்படியுமா என முஸ்லிம்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள் ஆனால் இப்போது உலகமே இப்படியுமா அரசியல் பன்னுவார்கள் அதுவும் இஸ்லாத்தின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் இப்படியா என அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கிபோய் உள்ளார்கள். இவர்கள் இவர்களுக்கு கிடைக்கும் இரண்டு சீட் கோட்டாவை கூட அதிமுகவில் ஒரு சீட் , திமுகவில் ஒரு சீட் என ஒரே நேரத்தில் வாங்கி அரசியலுக்கே புது வழி காட்டினாலும் காட்டுவார்கள். இப்படி இவர்கள் செய்து கொண்டு நாங்கள் இஸ்லாமிய கட்சி என்று வேறு சொல்வது ஒன்றும் அறியாத பிற மத அப்பாவி மக்களிடம் இஸ்லாத்தை பற்ரியே ஒரு தவறானா புறிதலை ஏற்படுத்திவிடும் அல்லாஹ்வை பயந்து கொள்வார்களா?