Monday 17 December 2012

விரைவில் முத்துப்பேட்டை தபால் நிலையத்தில் ரயிவே முன்பதிவுமையம் இயங்கும் தவ்ஹித்ஜமாத் கோரிக்கையை ஏற்று தனது கோட்டாவில் இருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாக AKSவிஜயன் எம்பி தகவல்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ரயில்வே முன்பதிவு மையத்தை மீண்டும் முத்துப்பேட்டைக்கு கொண்டுவர பல கட்ட முயற்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டது
தேவைபட்டால் போராட்டம் நடத்தவும் தயாராகி வந்த வேளையில் நம் தொகுதி எம்பியான ஏ கே எஸ் விஜயன் அவர்களுக்கு ஏற்கனவே எழுத்துமூலம் நகர திமுக வாயிலாக கோரிக்கை மனு கொடுத்து இருந்தாலும் எம்பி அவர்களை கடைசியாக நேரில் ஒரு தடவை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்துவது அப்படியும் நிறைவேற்றிதராவிட்டால் மாவட்ட மாநில ஆலோசனையோடு மிகப்பெறிய போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இன்று 17.12.2012 காலை நமது நிர்வாகிகள் எம்பி அவர்களை சந்தித்து ரிசர்வேசன் இல்லாததால் மக்கள் படும் இன்னல்களை எடுத்து சொல்லி ஏற்கனவே கடிதம் கொடுத்ததையும் யாபகப்படுத்தினார்கள்
அதற்க்கு பதில் அளித்த எம்பி அவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே எனக்குள்ள கோட்டாவில் ஒதுக்கீடு செய்துவிட்டேன் கூடிய விரைவில் முத்துப்பேட்டை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் இயங்கும் என தெறிவித்தார்
இதற்க்கு நன்றி தெறிவித்து விட்டு மேலும் ஒரு கோரிக்கையாக முத்துபேட்டையில் இருந்து நேரடியாக திருவாரூருக்கு பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது உடனே நம் எதிரிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் பேசிவிட்டு இதையும் கூடிய விரைவில் நிறைவேற்றிதருவதாக வாக்களித்தார்
எம்பி சொன்னபடி நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்
கடைசி செய்தி நாம் ரயில் வே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது எம்பி ஒதுக்கியது உண்மைதான் தபால் அதிகாரிகள்தான் இங்கு இடம் போதாது என தெறிவித்ததாக கூறினார் இதை தொடர்ந்து தபால் அதிகாரிகளை நேரில் சந்திக்க தவ்ஹித் ஜமாத் முயற்ச்சித்து வருகிரது