Monday 3 December 2012

அநியாயத்திர்க்கு ஆதரவாக அனைத்து முஹல்லா கூட்டம்


நியாய உனர்வுள்ளவர்கள் ஒரு சம்பவம் சம்மந்தமாக விசாரிப்பது என்றால் இரு தரப்பையும் அழைத்து விசாரித்து யார் தவறு செய்தார்களோ அவர்களை பாரபட்சம் இன்றி தண்டிக்க வேண்டும்
அதற்க்கு இயலாவிட்டால் வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டும் அதைவிட்டு விட்டு தவறு செய்தவனோடு சேர்ந்து கொண்டு தவ்ஹித் ஜமாத்தான் பிரச்சனை செய்தது என கூறுவது அடி முட்டாள்தனம்
முதலில் போட்டோ எடுத்ததுதான் பிரச்சனை என ஒரு செய்தியை பரப்பினர்கள் ,மையத்தை அடக்கி கொண்டு மையவாடியில் இருக்கும் போது வெளிப்பக்கமாக கேட்டை பூட்டினார்கள் இதை அங்குள்ள சகோதரர்கள் போட்டோ எடுத்தார்கள். போட்டோ எடுத்தது தவறா? வெளிப்பக்கம் பூட்டியது தவறா?
போட்டோ எடுத்ததுதான் பிரச்சனை என்றால் அனைத்து முஹல்லாவையும் கேட்கிறோம் இனிமேல் போட்டோ எடுக்காமல் நபிவழி படி அடக்கம் செய்ய நாங்கள் ஆட்சேபம் தெறிவிக்க மாட்டோம் என எழுதிதர தயாரா?
அடுத்து அனுமதி இல்லாமல் அடக்கம் செய்ததுதான் பிரச்சனை என்றார்கள் காலையில் இருந்து குழி வெட்டப்படுகிரது அடக்கத்திற்க்கு தேவையான சாமான்கள் கொண்டு செல்லப்படுகிரது இதையல்லாம் தடுக்காதது ஏன்?
அனுமதி வாங்காததுதான் பிரச்சனை என்றால் அனைத்து முஹல்லாவையும் கேட்கிறொம் இனிமேல் முறையாக அனுமதிவாங்கி கொண்டு அவர் அவர்கள் வீட்டு ஜனாசாவை அவர்கள் விருப்பப்படி நபிவழியில் அடக்கம் செய்யலாம் என எழுதிதர தயாரா?
முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல் மையவாடியிலும் நபிவழிபடி அடக்க அனுமதி இருக்கும்போது அரபுசாஹிப் பள்ளி மட்டும் ஏன் மறுக்குகிறீர்கள் என கேட்டால் அது நியாயம்
ஜனாசாவை அடக்கம் செய்ய வருபவர்களுக்கு பிரச்சனை செய்யனும் என்பது ஆசையா?அதுவும் ஜனாசாவை அடக்கிவிட்டு திரும்பி போகும்போது ஏன் பிரச்சனை செய்யவேண்டும்? நியாயமானவர்களே சிந்தித்து பாருங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்
தவ்ஹித் ஜமாத் பாதிக்கப்பட்டதால்தான் அவர்கள் அன்றே பிரச்சனை செய்தவர்கள் மீது காவல்துரையில் புகார் கொடுத்தார்கள்.நாம் பிரச்சனை செய்து இருந்தால் இவர்கள் ஏன் அன்றே புகார் கொடுக்கவில்லை? இன்று நாம் கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துரை சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்றதும் அனைத்து முஹல்லா அது இது என்று புழம்புகிறார்கள் கடைசியாக நம் மீது பொய் புகார் கொடுக்க ஏழு நாள் கழித்து இன்று முயற்ச்சி செய்வதாகவும் செய்திவருகிரது
சூழ்ச்சி செய்பவர்களுக்கல்லம் சூழ்ச்சிகாரன் அல்லாஹ் .சத்தியத்திர்க்கு எதிராக எத்தனை முஹல்லா ஒன்று சேர்ந்தாலும் தவ்ஹித்ஜமாத் அதை எதிர்கொள்ளும் அனைத்து மக்களும் நேர்வழி பெறவேண்டும் என்பதுதான் நம் நோக்கம்.எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நபிவழியை விட்டு சிறிதும் மாறமாட்டோம் கியாமத்து நாள்வரை தீமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.