Tuesday 1 January 2013

அநியாயத்திற்க்குஎதிராகதிரண்டுவந்தபெண்கள் ! முத்துப்பேட்டை முழுவதும் மக்கள் வெள்ளம் ! அனைத்துதரப்பு மக்களையும் சிந்திக்கவைத்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம் !










நபிவழியில் ஜனாசவை அடக்கம் செய்துவிட்டு வந்தவர்களை சுத்திவலைத்து தாக்க முற்பட்டவர்கள் மீது கொடுத்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துரை புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்கு பதிவு செய்த அநியாயத்தை கண்டித்து 31.12.2012 மலை 4 மனியளவில் முத்துப்பேட்டை பழையபேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

அதில் கண்டன உரையாற்றிய மாநில பேச்சாளர் தாவுத்கைசர் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துரை அதிகாரி அதை செய்யாமல் புகார் கொடுத்தவர் மீதே வழக்கு பதிவு செய்ததின் மூலம் அவர் கான்ஸ்டபிலாக இருக்ககூட லாயக்கு இல்லாதவர் என்பதை நிறுபித்துள்ளார் என கவல்துரை அதிகாரியை ஒரு பிடி பிடித்தார்

நாங்கள் அல்லாஹ்வை தவிர யாருக்கும் பயப்படமாட்டோம் இதே அரபுசாஹிப் பள்ளிமையவாடியில்மறுபடியும் மையத்தை அடக்கம் செய்வோம் நீங்கள் ரானுவத்தையே நிறுத்தினாலும் எங்களை தடுக்க இயலாது என சவால் விட்டார்

இது எங்களின் உரிமை எங்கள் உரிமையை யாருக்காகவும் பயந்து விட்டு கொடுக்க மாட்டோம் அரபு சாஹிப்பள்ளி யார் அப்பன் வீட்டு சொத்தும் அல்ல அதில் எங்களுக்கும் உரிமை உள்ளது என்பதை தெளிவுபடுத்தி ஆவேசமாக பேசினார்

நியாயத்திர்க்காக ஆன்களும் பெண்களும் ஆயிரக்கனக்கில் திரண்டு வந்து இருந்தனர் இனியாவது சம்பந்தபட்டவர்கள் திருந்துவார்களா? அல்லாஹ்விடம் துவா செய்வோம்

காவல்துரை அதிகாரிகள் தவறு செய்தவர்களை தண்டிப்பதோடு அப்பாவிகள் மீது போட்ட பொய்வழக்கை திரும்ப பெற்று தாங்கள் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடுவார்களா? பொருத்து இருந்து பார்ப்போம்