Tuesday 8 January 2013

சத்தியம் வென்றது! படிந்தது தமிழக அரசு ! சிறை நிறப்பும் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது





எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே தவ்ஹித்ஜமாத்தின் உறுதியான நிலைபாட்டையும் தவ்ஹித்ஜமாத் பக்கம் உள்ள நியாயத்தையும் தாமதமாக உனர்ந்து கொண்ட காவல்துரை சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தை தொடர்ந்து நாம் நடத்த இருந்த சிறைநிறப்பும் போராட்டம் விலக்கிகொள்ளபட்டது அல்ஹம்துலில்லாஹ் இது சம்மந்தமாக மாநில பொதுசெயளாளரின் அறிக்கை கீழே வெளியிடபட்டுள்ளது

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்று சிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது.

காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

மாநிலப் பொதுச் செயலாளர்