Saturday 5 January 2013

முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிவாசல் அருகில் தவ்ஹித் ஜமாத் கிளை 1 சார்பாக ஏகத்துவ பிரச்சாரம்



தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 3.1.2013 வெள்ளிகிழமை மாலை முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிவாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

வட்டியை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிரது அது பெரும்பாவங்களில் ஒன்று என்பது தெளிவாக தெறிந்தும் வட்டி அடிப்படையில் டெப்பாசிட் செய்வதை ஆர்வமூட்டும் முகாமை துனிச்சலாக முஸ்லிம்தெருவில் அதுவும் குட்டியார் பள்ளிஅருகிலேயே நடத்த ஜமாத் வங்கிக்கு அனுமதி அளித்து இருந்தது

இதை கண்டித்தும் அப்பாவி மக்களுக்கு உண்மையை உனர்த்தும் விதமாகவும் உடனடியாக அதே இடத்தில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது

இதில் பேசிய மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் வட்டி என்றால் என்ன? அதற்க்கு நாம் ஆதரவு கொடுத்தால் நமக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுப்பான் அதிலும் ஒரு ஜாமாத்துக்கு பொருப்புதாரியாக உள்ளவர்கள் இதை செய்யலாமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அதற்க்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமும் கொடுத்தார்

இதை ஆர்வமுடன் கேட்ட பெரும்பான்மையான மக்கள் நல்ல நேரத்தில் எங்களுக்கு விழிப்புனர்வு கொடுத்தீர்கள் தொடர்ந்து இதே போல பனி செய்யுங்கள் என ஆர்வமூட்டினார்கள் அல்ஹம்துலில்லாஹ்