தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு 26-01-2013 அன்று பட்டுக்கோட்டை ரோடு பழைய வின்னர்ஸ் ஸ்கூலில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி நண்பர்களும், மாற்றுமத நண்பர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் 22 பேர் இரத்த தானம் செய்தனர். திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுக்கப்பட்ட இரத்தங்கள் தானமாக வழங்கப்பட்டது.
குறிப்பு: 22 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் வந்தவண்ணம் இருந்தனர் ஆனால் 22 பேருக்கும் மேல் எடுத்து பாதுகாக்க முடியாது என்று மருத்துவ மனை ஊழியர்கள் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்