Monday 14 January 2013

கொசுத்தொல்லையில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகள்.கெமிக்கல் கொசுவர்த்தியை தவிர்ப்போம்! ஒரு கொசுவர்த்தி 100 சிகரட்டிர்க்கு சமம்



இன்று குறிப்பாக கிராமங்களிளும் நகரங்களிளும் இந்த பாழாய்ப் போன கொசுவை பற்றித் தான் பேச்சு. அன்றாட அரசியல் நிலவரங்கள் கூட அப்புறந்தான். எப்படி கொசுவிடமிருந்து தப்புவது என்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. நாமும் எத்தனையோ வழி முறைகளை செயல்படுத்தி இருப்போம். இந்தஉடலுக்கு கேடுவராத வழி முறைகளையும் பின்பற்றிப் பார்ப்போமே!

நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர் . அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால் , சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு , நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது ஒரு கொசுவர்த்தி 100 சிகரட் பிடிப்பதற்க்கு சமம் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட , வீட்டில் இருக்கும்
ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம் . இதனால் கொசுக்கள் அழிவதோடு , உடலும் ஆரோக்கியமாக இருக்கும் . அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போம்

தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் , வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது . எப்படியென்றால் தேங்காய் நார்கள் , வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு , வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது . எவ்வாறென்றால் , இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் , அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும் . தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது .
ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து , மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி , அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து , சிறிது நேரம் கழித்து பாருங்கள் , ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது . இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா ? என்று கேட்கலாம் . இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது .

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் , சல்பர் . இந்த சல்பர் எங்கு இருந்தாலும் , கொசுக்கள் வெளியில் தான் இருக்கும் . கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது . ஆனால் , ஒரு பிரச்சனை என்னவென்றால் , கற்பூரத்தை காற்றில் வைத்தால் , அது உடனே கரைந்துவிடும் .
ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து , எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால் , கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது . இல்லையென்றால் , ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் , அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது .

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த , கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும் . அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில்(Liquid Bottle) உள்ள காலி டப்பாவில் , கெரோசினை விட்டு , அதில் சிறிது கற்பூரத்தை விட்டு , மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும் . இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு , உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்