Sunday 25 August 2013

முதல்முறையாக பென்களுக்கான மபெரும் ஒருநாள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.08.2013 அன்று காலை 9 மனிமுதல் மாலை 6 மனிவரை அகாஷ் தொட்டவளாகத்தில் குவைத் சர்புதீன் அவர்கள் இல்லத்தில் மாபெரும் ஒருநாள் பென்கள் தர்பியா மிக சிறப்பாக நடைபெற்றது

இதில் கலந்து கொண்டவர்களுக்கு , குர் ஆன் ஓதும் பயிற்ச்சி தொழுகை பயிற்ச்சி, மற்றும் பெண்கள் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமும் பயிற்ச்சியும் அளிக்கப்பட்டது

சகோதரி  முத்துப்பேட்டை ஜசீரா ஆலிமா அவர்களும், சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்களும் இந்த தர்பியா நிகழ்சியை குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்

கலந்துகொண்ட மக்கள் இது மிகவும் பலனுள்ளதாக இருந்தது நிறைய இஸ்லாமிய சட்டங்களை இன்றுதான் தெளிவாக தெறிந்து கொண்டோம் மாதம் ஒரு தடவை இதே போல தர்பியா நிகழ்ச்சிகள் நடத்தினால் மிகவும் பலனுள்ளதாக இருக்கும் என்று கருத்து தெறிவித்தார்கள்

 முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகளோடு விடுமுறையில் தாயகம் வந்து இருந்த துபாய்,கத்தார்,சவுதி வாழ் முத்துப்பேட்டை தவ்ஹித் சகோதரர்களும் இனைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்.