Saturday 25 May 2013

முத்துப்பேட்டையில் புதிய தவ்ஹித்மர்கஸ் அமைப்பது சம்மந்தமாக ஆலோசனை


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டையில் தவ்ஹிதிர்க்காக ஏற்கனவே உறுவாக்கிய மர்க்கசை ஜாக்கிடம் கொடுத்துவிட்டு நாம் வெளியேறினாலும் அதன் பிறகு முத்துப்பேட்டையில் ஏற்பட்ட தவ்ஹித் எழுச்சியின் காரனமாக புதிதாக இரண்டு மர்கஸ்கள் அமைக்கப்பட்டு ஜும்மா மற்றும் மார்க்க சமுதாய பணிகள் நடந்து வருகிறது

நாளுக்கு நாள் மக்கள் தவ்ஹிதை விளங்கி குர் ஆன் ஹதீஸ்தான் இஸ்லாம் என்பதை புறிந்து அதிகமான மக்கள் தவ்ஹிதின் பக்கம் வருவதால் முத்துப்பேட்டையில் மேலும் இரண்டு மர்கஸ்கள் அமைப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்வதற்காக முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளார்கள்

முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் 24.05.2013 அன்று துபாயில் வாழும் முத்துப்பேட்டை மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள் ஆலோசனை பலனுல்லதாக அமைந்து இருந்தது அல்ஹம்துலில்லாஹ்