நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதாக ரஹ்மானியாபுரம் மக்கள் தெரிவித்தனர். சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஜாகீர் உசேன் நகர், வாவாநகரம், அச்சன்புதூர், கொருவன் சாலை பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்
வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதாக ரஹ்மானியாபுரம் மக்கள் தெரிவித்தனர். சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஜாகீர் உசேன் நகர், வாவாநகரம், அச்சன்புதூர், கொருவன் சாலை பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்