Wednesday 16 October 2013

புதுதெரு தவ்ஹித் திடலில் சிறப்பாக நடைபெற்ற ஹஜ்பெருநாள் தொழுகை








தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.10.2013 அன்று நபிவழி படி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை புதுதெரு தவ்ஹித் திடலில் நடைபெற்றது

நபிவழிபடி திடலில்தான் பெருநாள் தொழுகை நிறைவேற்றவேண்டும் என்பதை தெளிவாக அறிந்துவைத்துள்ள மக்கள் பெரும்திரளாக புதுதெரு தவ்ஹித் திடலில் குவிந்தனர்

நீங்கள் எவ்வளவுதான் ஆதாரங்களைகாட்டி திடல் தொழுகைதான் நபிவழி என்று சொன்னாலும் எங்கள் கவுரவத்தை விட்டுவிட முடியுமா என பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை அழைப்புகளை சுன்னத்ஜமாத் என சொல்லிகொள்பவர்கள் செய்தாலும்

 மக்கள் மிக தெளிவாக குர் ஆன் ஹதீசை விளங்கி திடலைநோக்கி வருகிறார்கள் வருடாவருடம் சுன்னத்தான வழியில் திடலில் தொழுக வரும் மக்களின் என்னிக்கை அதிகரித்துகொண்டுதான் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்

அதிலும் குறிப்பாக பெண்கள் தவ்ஹிதை விளங்கி ஒரு ஒரு காரியத்தையும் நபிவழிபடி செய்ய ஆர்வம்காட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிரது அல்ஹம்துலில்லாஹ்