Saturday 16 March 2013

செயல்படாத பஞ்சாயத்தும் குவிந்துகிடக்கும் குப்பைகளும் நாறிப்போகும் முத்துப்பேட்டை


முத்துப்பேட்டை நகரம் ஏ கிரேடு வரிவசூல் செய்யப்படும் நகரமாகும் முத்துப்பேட்டை நகரத்திர்க்குள்ளே ஆட்டோகூட நுழைய முடியாத சந்துக்களில் உள்ள வீடுகளுக்கும் ஏ கிரேடு வரி போட்டு செய்த அநியாத்தை மக்கள் பொருத்து கொள்ள முடியாமல்தான் வரி விதித்த திமுகவை வீட்டுக்கு அனுப்பினார்கள்

பல வாக்குறுதிகளை கொடுத்து பஞ்சாயத்தை கைபற்றிய அதிமுக அந்த வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் அந்த அநியாயத்தை தொடர்ந்தது அதோடு இப்போது ஊரை குப்பை மேடாகவும் கொசுக்களின் பன்னையாகவும் மாற்றிவருகிறார்கள்

தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை 1 கிளை சர்பாக பல முறை எச்சரிக்கை செய்தும் இதே நிலை நீடித்து வருகிறது ஏற்கனவே தவ்ஹித் ஜமாத் இது சம்மந்தமாக கலக்டருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியது

கலெக்டர் அவர்கள் உடனே பஞ்சயத்திற்க்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க கட்டளையிட்டார் அந்த கடிதத்தின் நகலை முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் கிளை 1 நிர்வாகத்திர்க்கும் அனுப்பிவைத்தார்

இவ்வளவு நடந்தும் பஜ்சாயத்து நிர்வாகம் பாராமுகமாக நடந்து வருகிரது இதே நிலை நீடித்தால் தவ்ஹித்ஜமாத் சார்பாக மக்களை திரட்டி பஞ்சயத்துபோர்டுக்கு எதிராக மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை செய்கிறோம்