Monday 16 September 2013

தெற்க்கு தெருவில் ஒரு தவ்ஹித் புரட்சி !! ஆர்வத்தோடு திரண்டுவந்த பெண்கள்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.09.2013 அன்று  தெற்க்கு தெருவில் உள்ள சகோதரர் ஷேக் தாவுது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

முத்துப்பேட்டையில் அதிகம் தவ்ஹித் சென்றாடையாமல் இருந்த தெற்க்கு தெருவில் தவ்ஹிதை எத்திவைப்பது நம் கடமை என்பதால் முதலில் பென்களில் இருந்து ஆரம்பம் செய்ய ஆலோசனை செய்து இன்று செயல்படுத்தப்பட்டது

முன்னதாக தவ்ஹித் பென்கள் வீடுவீடாக சென்று தவ்ஹித் கொள்கையை எத்திவைத்து பெண்கள் பயானுக்கு அழைப்பும் கொடுத்து வந்தார்கள்

பயான் ஆரம்பமாகும் முன்பே வீடு நிறைந்துவிட்டது வீட்டில் உள்ள மூன்று ரூம்களும் ஹாலும் நிறையும் அளவுக்கு பெண்கள் திரண்டு வந்தது பெண்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டியது அல்ஹம்துலில்லாஹ்

இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.மிகவும் பலனுள்ளதாக இருந்ததாக கலந்து கொண்ட மக்கள் கருத்து தெறிவித்தார்கள்

ஆன்களுக்கும் தனி இடவசதி செய்யப்பட்டு ஆன்களும் கலந்து கொண்டனர்