Monday 30 September 2013

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவ்ஹித்ஜமாத் நிதி உதவி



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  30.09.2013 அன்று நிதி உதவி வழங்கப்பட்டது

முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு வீடுகளுக்கு பதிப்பு ஏற்பட்டது
அதில் மூன்று வீடுகள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்

தீவிபத்து நடந்த அன்று இரவே தவ்ஹித்ஜமாத் கிளை 1 நிர்வாகிகள் நேரில் போய் ஆய்வு செய்து விட்டு அவர்களுக்கு ஆருதல் கூறிவிட்டு நிர்கதியாக இருந்த அவர்களுக்கு இரவு உனவு ஏற்பாடும் செய்துவிட்டு வந்தனர்

இன்று மீண்டும் அவர்களை சந்தித்து அவர்களுக்கு உடனடியாக என்ன தேவை என்பதை பார்த்து அவர்களிடமும் கலந்து பேசி விட்டு தேவையான உதவிகளை செய்தார்கள்

முற்றிலும் எரிந்து அதிகப்படியான நஷ்டமடைந்த சகோதரர் முகைதீன் அவர்கள் குடும்பத்திற்க்கு ரூபாய் பத்தாயிரமும் [10000]

சகோதரி மும்தாஜ் க/பெ தாவுது கனி  அவர்கள் குடும்பத்திற்க்கு ரூபாய் ஐந்தாயிரமும் [5000]

மாற்றுமத சகோதரி மலர் அவர்கள் குடும்பத்திற்க்கு ரூபாய் ஐந்தாயிரமும் [5000]

மொத்தம் 20 ஆயிரம்ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டது அல்லாஹ்போதுமானவன்.

கூடுதல் தகவல்--
                                        நம்மால் இயன்ற இந்த நிதி உதவியை செய்தாலும் அவர்கள் பாதிப்பை பார்க்கும் போது இந்த நிதி போதுமானதல்ல . அவர்களுக்கு நிதி உதவி செய்ய விரும்புவர்கள் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 மூலமாகவும் உதவி செய்யலாம் அல்லது தாங்கள் விரும்பினால் நேரடியாகவும் உதவி செய்யலாம் அல்லாஹ் நமக்கு நன்மையை தருவான்.